நிற்காமல் சென்ற சந்தேக நபர்... அதிவேகத் துரத்தலில் ஈடுபட்ட போலீஸ்! விபத்தில் மாட்டிக்கொண்ட இளைஞன்!

top-news
FREE WEBSITE AD

சிப்பாங், ஜூலை 2: போலீஸாரின் அதிவேக துரத்தலைத் தொடர்ந்து 29 வயது இளைஞன் தடுத்து வைக்கப்பட்டான்.  டெங்கிலில் உள்ள சைபர்சவுத் என்ற இடத்தில் காவல்துறைக்கும் சந்தேக நபரின் வாகனத்திற்கும் இடையே நடந்த இச்சம்பவம் விபத்தில் முடிந்தது.

நேற்று  இரவு 9.30 மணியளவில் ஜாலான் சைபர்ஜெயா-டெங்கில் வழியாக சந்தேக நபரின் வாகனத்தைக் கண்டபோது, போலீசார் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்ததாக சிப்பாங் மாவட்ட காவல்துறைத் தலைவர், உதவி ஆணையர் வான் கமாருல் அஸ்ரான் வான் யூசோப் கூறினார்.

அவரது வாகனத்தை நிறுத்துமாறு அறிவுறுத்தப்பட்டபோது, ​​சந்தேக நபர் வேகமாகச் சென்றதை அடுத்து, போலீசார் துரத்தியதாக அவர் கூறினார்.

இந்த அதிவேக துரத்தல் டெங்கிலில் உள்ள சைபர்சவுத்தில் முடிந்தத நிலையில், அங்கு இரண்டு வாகனங்களுக்கு இடையே விபத்து ஏற்பட்டது" என்று  இன்று ஓர் அறிக்கையில் அவர் தெரிவித்தார். இதனையடுத்து சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக அவர் கூறினார்!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *