ஆற்றில் ரசாயனக் கழிவைக் கொட்டிய லாரி ஓட்டுநர் கைது!

top-news
FREE WEBSITE AD

கோத்தா திங்கி, செப் 10: கோத்தா திங்கி,சுங்கை லிங்கியூவில் ரசாயன கழிவுகளை கொட்டியதாக சந்தேகிக்கப்படும் லாரி டிரைவர் நேற்று கைது செய்யப்பட்டார்.

ஜொகூர் சுகாதாரம் மற்றும் சுற்றுச்சூழல் குழுவின் தலைவர் லிங் தியான் சூன் அந்நபர் கைது செய்யப்பட்டதை உறுதிப்படுத்தினார்.

கம்போங் ஒராங் அஸ்லி பாசிர் இந்தான் கிராம மக்கள் ஆற்றில் இருந்து துர்நாற்றம் வீசுவதாக புகார் அளித்ததை அடுத்து கைது செய்யப்பட்டதாக லிங் கூறினார்.

இதனால் சுங்கை லிங்கியூவில் இருந்து சுமார் ஒரு கிலோ மீட்டர் தொலைவில் வசிக்கும் கிராம மக்கள் மூச்சு விடுவதில் சிரமம், வாந்தி, வயிற்றுப்போக்கு, தலைவலி போன்றவற்றால் அவதிப்பட்டனர்.

இறுதியில் பலாய் ராயா கம்பூங் ஒராங் அஸ்லி சயோங் பினாங்கிற்கு மாற்றப்பட்டனர், தற்போதும் அங்கேயே இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *