ஜொகூர் அரண்மனை வேலியை மோதித் தள்ளிய வாகனம்!

top-news
FREE WEBSITE AD

ஜொகூர்பாரு, ஜூன் 4: ஜொகூர் அரண்மனையின் வேலியை  வாகனம் ஒன்று மோதித்தள்ளியதில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

 

25 வயது இளைஞர் ஒருவர் பயணித்த கார் கடும் மழையின் காரணமாகச் சாலையில் சறுக்கியதால், வாகனம் கட்டுப்பாட்டை இழந்து இவ்விபத்து நிகழ்ந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

இச்சம்பவம் நேற்று மாலை 3 மணியளவில் நிகழ்ந்ததாக தென் ஜொகூர் பாரு மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி ரவூப் செலமாட் கூறினார்.

இச்சம்பவத்தில் சம்பந்தப்பட்ட இளைஞருக்கு எவ்விதக் காயமும் ஏற்படவில்லை. மது தொடர்பான அறிகுறியும் இல்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *