போரினால் சுற்றுலாத் துறைக்கு பாதிப்பில்லை! - அதிகரிக்கும் சுற்றுப்பயணிகளின் எண்ணிக்கை

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், ஏப் 1: மத்திய கிழக்கில் போர் இருந்தபோதிலும், மலேசியாவின் சுற்றுலாத் துறை இந்த மாதம் 2.4% வளர்ச்சி கண்டுள்ளது என்று சுற்றுலா, கலை மற்றும் கலாச்சார அமைச்சர் தியோங் கிங் சிங் தெரிவித்துள்ளார். தனது ஃபேஸ்புக் பதிவில், கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் 27,69,305 ஆக இருந்த சர்வதேசப் பயணிகளின் வருகை, மார்ச் 1 முதல் 26 வரையிலான காலகட்டத்தில் 28,35,724 ஆக உயர்ந்துள்ளதாக தியோங் கூறினார்.

முக்கிய ஆசிய சந்தைகளில் இருந்து கிடைத்த வலுவான தேவையே சுற்றுலாப் பயணிகளின் இந்த அதிகரிப்புக்கு முக்கியக் காரணம் என்றும் அவர் கூறினார். ஆசியான் நாடுகள் பார்வையாளர்களின் மிகப்பெரிய ஆதாரமாகத் தொடர்ந்து திகழ்கின்றன. அவை 2.09 மில்லியன் வருகையாளர்களைப் பங்களித்துள்ளன, இது கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 0.6% அதிகம் என்று அவர் கூறினார்.

இந்த மாத தொடக்கத்தில், மத்திய கிழக்கில் அதிகரித்து வரும் புவிசார் அரசியல் பதட்டங்கள் மற்றும் உலகளாவிய மனநிலையில் ஏற்படும் மாற்றம் ஆகியவற்றால் அரசாங்கத்தின் 'விசிட் மலேசியா 2026' (VM2026) பிரச்சாரம் பாதிக்கப்படலாம் என்று ஒரு ஆராய்ச்சி நிறுவனம் கூறியது குறிப்பிடத்தக்கது!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *