காரில் இருந்து தூக்கி வீசப்பட்ட பெண்! சம்பவ இடத்திலேயே பலி!

top-news
FREE WEBSITE AD

கோத்தா கினபாலு, ஜூன் 4: நேற்று திங்கள்கிழமை மாலை  சபா கோத்தா கினபாலு, பாப்பாரின் கினாருட்டில் உள்ள கம்போங் கவாங்கில் நடந்த விபத்தில் காரில் இருந்து தூக்கி வீசப்பட்ட ஒரு பெண் சம்பவ இடத்திலேயே பலியானார்.

பாதிக்கப்பட்ட 44 வயதான அந்தப் பெண் சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டதாக மருத்துவ அதிகாரிகளால் உறுதிப்படுத்தப்பட்டது, மேலும் காரில் இருந்த 16 மற்றும் 39 வயதுடைய இருவருக்கு சிறு காயங்கள் ஏற்பட்டன.

 முதல்கட்ட விசாரணையில், அவர்களின் கார் வழுக்கும் பாதையில் இருந்து விலகியதால், சாலையில் இருந்து 50 மீ தொலைவில் உள்ள பள்ளத்தில் வாகனம்  விழுந்ததில் பாதிக்கப்பட்டவர் தூக்கி வீசப்பட்டார்.

பின்னர்  சபா தீயணைப்பு மற்றும் மீட்புக் குழுவினர்  பாதிக்கப்பட்டவர்களை மீட்டனர்.

இதனை அடுத்து சடலம் போலீஸாரிடம் ஒப்படைக்கப்பட்டதோடுபடுகாயம் அடைந்த இருவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக பாப்பர் மாவட்ட மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *