பாதுகாப்பு காவலில் இருந்த பெண் மாயம்! இரு குழந்தைகளுடன் காணாமல் போனதாக அறிவிப்பு!

top-news
FREE WEBSITE AD

மாது ஒருவரும் அவரது இரண்டு குழந்தைகளும் பாதுகாப்பு காவலில் இருந்து வெளியேறிய பின்னர் காணாமல் போயுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பந்தப்பட்ட 25 வயது பெண், ஐந்து வயது மகள் மற்றும் மூன்று வயது மகன் ஆகியோர் நலத் துறை தங்குமிடத்தில் தங்கியுள்ளனர்.

குடும்ப துஷ்பிரயோகத்தால் பாதிக்கப்பட்ட அந்தப் பெண், தனது கணவர் போதைக்கு அடிமையானவர் என்று போலீஸாரிடம் தெரிவித்துள்ளார்.


இதனை அடுத்து நலத் துறையின் பாதுகாப்பில் வைக்கப்படுவதற்கு முன்பு  ஷா ஆலம் செக்சன் 6 காவல் நிலையத்திற்கு அனுப்பப்பட்டார்.

ஷா ஆலம் நலத் துறை அவர்களை மே 10 ஆம் தேதி மதியம் 1.30 மணியளவில் தங்குமிடத்திற்கு அழைத்து வந்தது.

பின்னர் அம்மாது மசூதிக்கு செல்ல அனுமதி கேட்டு மே 10-ஆம் தேதி மாலை 4.30 மணியளவில் அங்கிருந்து சென்றது விசாரணையில் தெரியவந்ததாக ஏசிபி ஷாருல்நிஜாம் தெரிவித்தார். மறுநாள்  தங்குமிடத் தரப்பிலிருந்து போலீசில் புகார் அளித்ததாக அவர் கூறினார்.

இந்நிலையில் அவர்கள் இருக்கும் இடம் பற்றிய தகவல் தெரிந்தவர்கள் அருகிலுள்ள காவல் நிலையத்தையோ அல்லது விசாரணை அதிகாரி முகமட் சஃபுவான் அலியாஸை 011-1025 5725 அல்லது 03-7874 2222 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்! 

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *