உலகின் அதிக வயது கொண்ட பெண்மணி தன் 117 வயதில் காலமானார்!

top-news
FREE WEBSITE AD

அமெரிக்காவில் பிறந்து ஸ்பெயின் நாட்டில் வாழ்ந்த மரியா பிரான்சிஸ் மோரேரோ என்ற மூதாட்டி உலகின் அதிக வயது கொண்டவராக இருந்தார். 1907-ல் பிறந்த அவர் 117வயது வரை வாழ்ந்து 2024-ல் மறைந்திருக்கிறார். இவருக்கு 3 மகள்கள், 11 பேரக் குழந்தைகள், 13 கொள்ளுப் பேரக்குழந்தைகள் இருக்கின்றனர். பிரான்சிஸ் மோரோரோ தனது வாழ்நாளில் இரண்டு உலகப் போர்கள், ஸ்பானிஷ் புளு முக்கிய நிகழ்வுகளை கடந்தவர். மேலும் கொரோனா பெருந்தொற்று காலத்திலும் ஆரோக்கியமாக வாழ்ந்திருக்கிறார்.

கடந்த இரண்டு தசாப்தங்களை முதியோர் இல்லத்தில் கழித்த அவர் 2023-ல் உலகின் மிக வயது மூத்த பெண்மணி என கின்னஸ் சாதனைக்கான சொந்தக்காரர். தனது மறைவு பற்றி குடும்பத்தினரிடம் மிக விரைவில் என்னுடைய பயணம் முடிவுக்கு வரும் என சொல்லியிருக்கிறார். மரணத்தை முன்கூட்டியே கணித்து தான் சொன்னவாறே மறைந்திருக்கிறார் பிரான்சிஸ் மோரோரோ.

இவருடைய மறைவுக்குப் பின் தற்போது ஜப்பானில் வாழ்ந்து கொண்டிருக்கும் 116 வயது மூதாட்டியான டோமிகோ இடூகோ உலகின் அதிக வயதுடைய பெண்மணியாக ஜெரண்டாலஜி ஆராய்ச்சி நிறுவனம் அறிவித்துள்ளது. இவர் 1908-ல் பிறந்தவராவார்.



ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *