வாய்ப்பை பயன்படுத்த முயற்சிக்கிறார்கள்! - PN குறித்து ஜாஹிட் கருத்து

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், ஏப் 28: நெகிரி செம்பிலானில் நிலவும் அரசியல் நெருக்கடியைப் பயன்படுத்தி, பாரிசான் நேஷனலுடன் (BN) இணைந்து ஒரு புதிய மாநில அரசை அமைக்க முன்வந்ததன் மூலம் பெரிகாத்தான் நேஷனல் (PN) ஆதாயம் தேட முயற்சிப்பதாக பாரிசான் நேஷனல் தலைவர் அஹ்மத் ஜாஹிட் ஹமிடி குற்றம் சாட்டியுள்ளார்.

PN-இன் இந்த முன்மொழிவு குறித்து செய்தியாளர்கள் கேட்டபோது, ​​"அரசியலில், ஒருவர் எல்லா நேரங்களிலும் வாய்ப்புகளைத் தேடுவார், அவர்களும் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ள முயற்சிக்கிறார்கள்என்று ஜாஹித் சுருக்கமாகக் கூறினார்.

முன்னதாக நேற்று, மந்திரி பெசார் அமினுதீன் ஹரூனுக்கு BN-இன் 14 சட்டமன்ற உறுப்பினர்கள் அளித்த ஆதரவைத் திரும்பப் பெற்றதைத் தொடர்ந்து, ஒரு புதிய மாநில அரசை அமைக்க BN உடன் இணைந்து பணியாற்ற PN தயாராக இருப்பதாக நெகிரி செம்பிலான் எதிர்க்கட்சித் தலைவர் ஹனிஃபா அபு பக்கார் கூறினார்.

திடீர் மாநிலத் தேர்தலை நடத்த BN வலியுறுத்துமா என்று கேட்டதற்கு, கூட்டணியின் உயர்மட்டத் தலைமை இந்த விஷயத்தை இன்னும் விவாதிக்கவில்லை என்று ஜாஹிட் கூறினார்!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *