ஐந்து ஆண்டுகளுக்குள் இபிஎஃப் சேமிப்பை முடித்து விடுகிறார்கள்! - அன்வார்

top-news
FREE WEBSITE AD


கோலாலம்பூர், ஜூன் 4: ஈபிஎஃப் தரவுகளின் படி நான்கு உறுப்பினர்களில் ஒருவர் பணத்தை திரும்பப் பெறும் வயதை அடைந்த பிறகு ஐந்து ஆண்டுகளுக்குள் தங்கள் இபிஎஃப் சேமிப்பை முடித்து விடுகிறார்கள் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் தெரிவித்தார்.

சர்வதேச சமூக நல்வாழ்வு மாநாட்டின் (ISWC)  தொடக்க விழாவில் பேசிய அவர், EPF பலன்களின் மொத்தத் தொகையால் பல மலேசியர்கள் ஓய்வு காலத்தில் நியாயமான வாழ்க்கைத் தரத்தைப் பராமரிக்கவோ அல்லது நீண்ட ஆயுட்கால அபாயங்களை நிர்வகிக்கவோ முடியாமல் போகிறார்கள் என்று அவர் கூறினார்.

கூடுதலாக, சராசரி மலேசிய மக்கள்தொகையுடன் ஒப்பிடும்போது முதியோர்கள் வறுமைக்கு ஆளாகிறார்கள். 29 சதவீத மலேசியர்களுக்கு மட்டுமே ஓய்வூதியம் அல்லது ஓய்வூதியம் போன்ற வருமானம் உள்ளது என்று அவர் குறிப்பிட்டார்!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *