சில யூடியூபர்களால் சீரழியும் இக்காலத்து இளம் தலைமுறையினர்!

top-news
FREE WEBSITE AD

இர்ஃபான் மற்றும் பிரியாணி மேன் இருவரும் சமூக ஊடகங்களில், குறிப்பாக யூடியூப்பில் சில நாட்களாக சண்டையிட்டு வருகின்றனர்.

பிரியாணி மேன் இர்பானை சரமாரியாக குற்றம் சாட்டி காணொளி ஒன்றை வெளியிட்டிருந்தார்.இதற்கு பதிலடியாக இர்பான் பதில் காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளார். அதற்கும் பிரியாணி மேன் பதில் காணொளி ஒன்றை பதிவிட்டுள்ளார்.  இருவரும் சமூக வலைதளங்களில் கடுமையாக மோதிக்கொண்டனர்.

பஞ்சாயத்து பெரிதாகிவிட்டதால் மன உளைச்சல் காரணமாக பிரியாணி மேன் யூடியூப் நேரலையில் தற்கொலைக்கு முயன்றார். இந்த நேரலை இணையவாசிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தன் தற்கொலைக்கு ஜேசன் தான் காரணம் என்று கூறி தற்கொலைக்கு முயன்ற பிரியாணி மேன் கடைசி நேரத்தில் அம்மாவால் காப்பற்றப்பட்டார்.

அதாவது நேரலை காணொளியில் இதை செய்ய முற்பட்ட போது அதை நேரலையில் பார்த்த அவரது நண்பர்கள் சிலர் பிரியாணி மேனின் தாயாருக்கு போன் செய்து விஷயத்தை தெரிவித்தனர். பூட்டியிருந்த அறைக் கதவை அம்மா உடனே தட்டியதால் ஒன்றும் நடக்காதது போல் சமாளித்தார் பிரியாணி மேன் . நேரலையில் ஒருவர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த காணொளி தற்போது வைரலாகி வருகிறது.


ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *