மகாராஷ்டிராவில் மழைக்காற்றுக்கு தாங்காமல் தூள் தூளான சத்ரபதி சிவாஜி சிலை!

top-news
FREE WEBSITE AD

இந்திய புதிய நாடாளுமன்ற கூரையில் நீர் கசிவு, உத்தரப் பிரதேச மாநிலத்தில் அமைந்துள்ள ராமர் கோவில் கூரையில் நீர் கசிவு, டெல்லி சுரங்கத்தில் நீர் கசிவு, மகாராஷ்டிர மேம்பாலத்தில் விரிசல், டெல்லி வானூர்தி நிலைய மேற்கூரை இடிமானம் என பல எடுத்துக்காட்டுகள் கூறிக்கொண்டே. போகலாம்

மேலே கூறிய ஒவ்வொரு கட்டுமானத்திற்கும் நூற்றுக்கணக்கான கோடிகள் செலவிடப்பட்டுள்ளன. இதுவே பா.ஜ.க.வினர் முன்மொழிகிற கட்டுமான வளர்ச்சியாகவும் அமைந்துள்ளது.

அந்த வரிசையில் தற்போது புதிதாக இணைக்கப்பட்ட கட்டுமான பிழை தான், மகாராஷ்டிர மாநிலத்தில் மழைக்காற்றுக்கு கூட தாங்காமல் தூள் தூளான சத்ரபதி சிவாஜி சிலை.

35 அடி உயரம் கொண்ட இச்சிலைக்கு சுமார் ரூ. 3,600 கோடி செலவு செய்யப்பட்டுள்ளது. அரசு செலவு செய்திருக்கிறது என்றால் மக்கள் வரியாக செலுத்திய பணத்தை செலவு செய்திருக்கிறது என்பதே பொருள்.

அந்த வகையில், மக்கள் பணமான ரூ. 3,600 கோடியில் கட்டி எழுப்பப்பட்ட இச்சிலையை, பிரதமர் மோடி 8 மாதங்களுக்கு முன் திறந்துவைத்தார்.

சிலையை கட்டுவதற்கான டெண்டர் NDA கூட்டணியில் இருக்கிற சிவசேனா (ஷிண்டே) கட்சியின் தலைவரும் மகாராஷ்டிர முதல்வருமான ஏக்நாத் ஷிண்டேவின் வலியுறுத்தலின் பேரில் ஜெய்தீப் ஆப்தேக்கு வழங்கப்பட்டது.

இந்நிலையில், 24 வயதே ஆன ஜெய்தீப் ஆப்தே ஏக்நாத் ஷிண்டேவின் நெருங்கிய நண்பர் என்ற தகுதி பெற்றவரே தவிர, அவருக்கு சிலை செய்வதில் எவ்வித முன் அனுபவம் இல்லை என்ற குற்றச்சாட்டு வலுக்கத்தொடங்கியுள்ளது.

இதனால், நண்பர், தெரிந்தவர், நன்கொடையாளர் என்ற காரணங்களுக்காக டெண்டர்கள் ஒதுக்கப்படுவதும், அவ்வாறு கட்டி எழுப்பப்படும் கட்டுமானங்கள் ஒரு ஆண்டுக்கு கூட தாக்குப்பிடிக்காததும் ஒன்றிய பா.ஜ.க அரசின் கட்டுமான தோல்வியை வெளிச்சம் போட்டு காட்டி வருகின்றதாய் அமைந்துள்ளது.



ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *