தென் கொரியா நீதிமன்றத்தில் இருந்து தப்பிச் சென்ற திருடனால் பரபரப்பு!

top-news
FREE WEBSITE AD

வீட்டை உடைத்து திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்ட நபர், ஸ்பைடர் மேன் பாணியில் நீதிமன்றத்தில் இருந்து தப்பித்துச் செல்லும் காணொளி காட்சிகள் வெளியாகியுள்ளது.

தென் கொரியா நீதிமன்றத்தில் வீட்டை உடைத்து திருடியதாக ஒரு நபர் ஆஜர் படுத்தப்பட்டுள்ளார். இந்த நிலையில், அவர் ஸ்பைடர் மேன் போல நீதிமன்றத்தில் இருந்து தப்பிச் செல்லும் காணொளி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ள பாதுகாப்பு நிறுவனம், பாதுகாப்பு நிறைந்த நீதிமன்ற வளாகத்தில் இருந்து குற்றவாளி தப்பிச் சென்றுள்ளார். இவர் வீட்டை உடைத்து திருடிய வழக்கில் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டவர் என்று கூறியுள்ளது.

இணையத்தில் வைரலாகும் அந்த வீடியோவில் கருப்பு நிற உடை அணிந்திருக்கும் நபர் ஒருவர் மூன்று அடுக்கு மாடி கொண்ட நீதிமன்றத்தில் இருந்து தப்பிச் செல்கிறார். மிகவும் சவாலான அந்த கட்டட அமைப்பில் அவர் ஸ்பைடர் மேன் போல மாடி வீட்டு மாடி இருங்கி தப்பிச் செல்கிறார். அவர் தப்பிச் செல்வதை நீதிமன்ற வளாகத்தில் இருந்து யாரோ ஒருவர் காணொளியாக எடுத்துள்ளார். தற்போது அந்த காணொளி இணையத்தில் மிக வேகமாக வைரலாகி வருகிறது.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *