சிறுவன் கொலை வழக்கு; விலகாத மர்மம்... தொடர்ந்து காவலில் பெற்றோர்!

top-news
FREE WEBSITE AD


பெட்டாலிங் ஜெயா, ஜூன் 6: பெட்டலிங் ஜெயா, டாமான் சாரா, டாமாய் இடாமான் அடுக்குமாடிக் குடியிருப்பைச் சேர்ந்த ஆட்டிஸம் நோயால் பாதிக்கப்பட்ட ஆறு வயது சிறுவன் ஜெய்ன் ரய்யான் அப்துல் மடின்  கொலை தொடர்பாக, அச்சிறுவனின்  பெற்றோரின் விளக்கமறியலில் வைக்கப்பட்ட நிலையில், அந்த உத்தரவு நீட்டிக்கப்படுவதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

சிலாங்கூர் காவல்துறைத் தலைவர் டத்தோ ஹுசைன் உமர் கான் இதனை உறுதிப்படுத்தினார்.

கடந்த மே 31-ஆம் தேதி அச்சிறுவனின் பெற்றோர் புஞ்சாக் ஆலமில் கைதுசெய்யப்பட்டனர்.

சிறுவனின் பெற்றோரைத் தவிர, அச்சிறுவனின் முன்னாள் குழந்தை பராமரிப்பாளர் மற்றும் மேலும் மூன்று நபர்களையும் போலீசார் அழைத்துள்ளனர்.

கடந்த டிசம்பர் 5 ஆம் தேதி, டாமா ன் சாரா டாமாயில் ஜெய்ன் ரய்யான் காணாமல் போனதாகக் கூறப்பட்டது, பின்னர் அவரது உடல் இடமான் அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள அவரது வீட்டிலிருந்து 200 மீ தொலைவில் உள்ள ஓடை அருகே கண்டெடுக்கப்பட்டது.

பிரேதப் பரிசோதனையில் அச்சிறுவனின் கழுத்து மற்றும் உடலில் காயங்கள் இருப்பது தெரியவந்ததால், அவர் கொல்லப்பட்டதாக முடிவு எடுக்கப்பட்டது!

 

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *