வெளிநாடு முதலீடுகளை ஈர்த்தாலும்; மன நிறைவுக்கான இடமாக இல்லை! - அன்வார்

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர்: மலேசியா கணிசமான வெளிநாட்டு முதலீடுகளை ஈர்த்தாலும், மன நிறைவுக்கான இடம் இல்லை என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் தெரிவித்துள்ளார்.

நாம் முன்னேறிவிட்டோம், நாம் பெருமைப்படக்கூடிய ஒரு மாற்றம் ஏற்பட்டுள்ளது. ஆனால், சிங்கப்பூர், இந்தோனேசியா, வியட்நாம் ஆகிய நாடுகளுடன் நமது பலம் மற்றும் சாதனைகளை ஒப்பிட வேண்டிய அவசியம் உள்ளது என்று அன்வார் கூறினார்.

இந்த மூன்று நாடுகளும் மலேசியாவுடன் கடுமையாகப் போட்டியிடுகின்றன. எனவே நாம் இனி நமது ஆறுதல் மண்டலத்தில் இல்லை. இனி நாம்  நமது அண்டை நாடுகளுடன் நம்மை ஒப்பிட்டுப் பார்க்கவும், போட்டியிடும் அண்டை நாடுகளின் சிறப்பு மற்றும் பலம் என்ன என்பதைப் பார்க்கவும் நேரத்தைப் பயன்படுத்த வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *