பிரிட்டன் பிரதமரின் இந்திய வருகையை உற்று பார்க்கும் சீனா!
- Muthu Kumar
- 08 Oct, 2025
பிரிட்டன் பிரதமர் கியர் ஸ்டார்மர் இரண்டு நாட்கள் அரசு முறை பயணமாக இன்று இந்தியாவுக்கு வந்துள்ளார்.நாளை இந்தியபிரதமர் நரேந்திர மோடியை அவர் சந்தித்து பேச இருக்கிறார். இந்த சந்திப்புகளை சீனா கவனமாக உற்றுநோக்கி வருகிறது.
கியர் ஸ்டார்மருடன், 125 பேர் கொண்ட குழுவும் இந்தியாவுக்கு வருகிறது. இந்தக் குழுவில் தலைமை செயல் அதிகாரிகள், பிரிட்டிஷ் கல்வி நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள் மற்றும் தொழில் குழுமங்களின் பிரதிநிதிகள் இடம்பெற்றுள்ளனர்.
அமெரிக்காவின் வரி நெருக்கடியை இரு நாடுகளும் எதிர்கொண்டிருக்கின்றன. அமெரிக்க வர்த்தகத்திற்கு மாற்றாக ஐரோப்பிய வர்த்தகத்திற்கான வாய்ப்புகளை பயன்படுத்த இந்தியா திட்டமிட்டு வருகிறது. எனவே கடந்த ஜூலை மாதம் இந்திய பிரதமர் மோடி, ஐரோப்பிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தார். அப்போது பிரிட்டனுடன் தடையற்ற ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டிருந்தார். இதனையடுத்து தற்போது பிரிட்டன் பிரதமர் இந்தியாவுக்கு வருகிறார்.
இப்பயணத்தின் போது, பிராந்திய மற்றும் உலகளாவிய பிரச்சினைகள் குறித்தும் இருதரப்பு பேச்சுவார்த்தைகள் நடைபெறும் என இந்திய மத்திய அரசு அறிவித்தது. அதேபோல இந்த பேச்சுவார்த்தைகள் இருதரப்பு உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில் நடத்தப்படும். இதில், ஜூலை 2024-ல் தொடங்கப்பட்ட தொழில்நுட்ப பாதுகாப்பு முன்முயற்சியான தொழில்நுட்ப கூட்டாண்மை முக்கியத்துவம் பெறும் என இங்கிலாந்து அரசு வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
மோடியின் இங்கிலாந்து பயணத்தின் போது வரையறுக்கப்பட்ட இந்தியா-இங்கிலாந்து உறவுகளை 'பார்வை 2035' என்ற பத்து ஆண்டு திட்டத்தை இரு நாட்டுத் தலைவர்களும் மறுபரிசீலனை செய்வார்கள். வர்த்தகம், காலநிலை, கல்வி, தொழில்நுட்பம் மற்றும் மக்கள் தொடர்புகள் எனப் பல பரிமாணங்களை உள்ளடக்கிய ஒரு புதிய திட்டங்களுக்கான வரைபடத்தை இது குறிக்கிறது. இந்த வர்த்தக ஒப்பந்த திட்டமும், கடந்த ஜூலை மாதம் 'பார்வை 2035' வெளியிடப்பட்டதும் இரு தரப்பினரும் தங்கள் உறவுகளை மறுசீரமைக்க எடுத்த முடிவுகளின் விளைவுகளாகும்.
நாளை இந்திய பிரதமர் மோடியும் ஸ்டார்மரும் மும்பையில் நடைபெறும் உலகளாவிய ஃபின்டெக் திருவிழாவில் முக்கிய உரையாற்றுவார்கள். இந்தியா, பிரிட்டனுடன் போட்ட சமீபத்திய வர்த்தக ஒப்பந்தத்தின் கீழ், இங்கிலாந்து 99% பொருட்களுக்கான வரிகளை நீக்கியுள்ளது. எனினும், இது இங்கிலாந்துக்குச் செல்லும் இந்திய ஏற்றுமதியில் 45% (அல்லது $6.5 பில்லியன்) மட்டுமே பாதிக்கும் என்று குளோபல் டிரேட் இனிஷியேட்டிவ் தெரிவித்துள்ளது. இதனால் ஜவுளி, காலணி, கடல் உணவு, ஆட்டோமொபைல்கள் போன்ற பொருட்கள் பாதிக்கப்படும்.
வர்த்தக ஒப்பந்தம் இன்னும் நடைமுறைக்கு வரவில்லை. இது பிரிட்டிஷ் சட்டமன்றச் செயல்பாட்டில் உள்ளது. 2026-ன் தொடக்கத்திற்கு முன் ஒப்பந்தம் செயல்படுத்தப்படுவது சாத்தியமில்லை என்று விவரம் அறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஐரோப்பிய நாடுகளுடன் இந்தியா மேற்கொண்டிருக்கும் ஒப்பந்தத்தை சீனா கவனமாக உற்றுநோக்கி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



