நட்பின் அடையாளம் சீனா! - அன்வார்

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், ஏப்ரல் 17: சீன அதிபர் ஜி ஜின்பிங்கின் அரசுமுறைப் பயணம், மலேசியாவிற்கும் சீனாவிற்கும் இடையிலான வலுவான, நீண்டகால நட்புறவின் அடையாளமாக விளங்குகிறது என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார்.

மேலும் இந்த நெருக்கம் நம்பிக்கை, மரியாதை மற்றும் நேர்மையால் தொடர்ந்து வலுவாகவும் பலப்படுத்தப்பட்டும் வருகிறது என்று அவர் தெரிவித்தார்.

 உலகம் பெரும் சவாலை எதிர்நோக்கும் இந்தக் காலக்கட்டத்தில்,  சீனா  பகுத்தறிவுடன், நிலையான மற்றும் கொள்கை ரீதியான நண்பராக உருவெடுத்துள்ளது என்றும், மலேசியா சீனாவின் அந்த உறுதியான நிலைத்தன்மையை மதிக்கிறது என்றும் அவர் கூறினார்.

வரலாற்று கவனம் மற்றும் எதிர்காலத்திற்கான தொலைநோக்குப் பார்வையுடன் ஒரு நட்பு நாடாக சீனா தொடரும் என்றும் னவர் தெரிவித்தார்.

உலகளாவிய நாகரிகம் மற்றும் மனிதகுலத்தின் மதிப்புகளை நிலைநிறுத்துவதிலும்,  ஜியின் தலைமைக்கு தனது மரியாதையையும் பாராட்டையும் தெரிவித்துக்கொள்வதாக அன்வார் கூறினார்.

மலேசியா-சீனா உறவுகள் தொடர்ந்து மலர்ந்து பிரகாசமான எதிர்காலத்திற்காக வலுப்பெறட்டும். இந்த வரலாற்று வருகைக்கு நன்றி. மீண்டும் சந்திப்போம் என்று அன்வார் குறிப்பிட்டுள்ளார்!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *