5000 கி.மீ தூரத்தில் இருந்து ரோபோ மூலம் அறுவைசிகிச்சை செய்த சீன மருத்துவர்!

top-news
FREE WEBSITE AD

சீனாவில் வசித்து வரும் ஒருவர் நுரையீரல் கட்டியால் மிகவும் வேதனைபட்டு இருந்ததுள்ளார். இந்நிலையில் சிகிச்சைக்காக கஷ்கரில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அவருக்கு சிகிச்சை அளிக்க நுரையீரல் சம்பந்தப்பட்ட மருத்துவர் ஷாங்காயில் உள்ள மருத்துவமனையில் இருந்தார்.

அதாவது நோயாளி இருக்கும் இடத்தில் இருந்து 5000 கி.மீ தூரத்தில் மருத்துவர் இருந்துள்ளார். அந்த மருத்துவர் 5g தொழில்நுட்பம் கொண்ட அறுவை சிகிச்சை செய்யும் ரோபோவின் துணையோடு அந்த நோயாளிக்கு நுரையீரல் கட்டியை அறுவை சிகிச்சை மூலம் நீக்கினார். அதாவது அந்த மருத்துவர் இருக்கும் இடத்திலிருந்து ரோபோவை செயல்படவைத்து  இந்த அறுவை சிகிச்சையை ஒரு மணி நேரத்தில் செய்து முடித்தார்.

இதேபோன்ற ரோபோ இந்தியாவிலும் தயாரிக்கப்பட்டு, அறுவை சிகிச்சையும் செய்தது. ஆனால் அந்த அறுவை சிகிச்சையானது நோயாளி இருக்கும் இடத்திலிருந்து 40 கிலோ மீட்டர் தொலைவில் இருந்த மருத்துவர் ரோபோ மூலம்  நோயாளிக்கு அறுவை சிகிச்சையை மேற்கொண்டார். அறிவியலின் மூலம் மருத்துவ முன்னேற்றம் இந்த அளவிற்கு வளர்ந்து வருவது வரும் காலத்தில் நோயாளிகளுக்கு தீர்க்க முடியாத பிரச்சினைகளை தீர்க்கும் ஒரு வரப்பிரசாதமாக அமையும் என்கின்றனர் மருத்துவ வல்லுனர்கள்.



ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *