முதலில் மக்களைப் பற்றி சிந்தியுங்கள்! - பெர்சாத்துவுக்கு பாஸ் யூத் ஆலோசனை

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், பிப் 27: ஹம்சா ஜைனுடினுக்குப் பதிலாக பெரிகாத்தான் நேஷனல் தனது புதிய எதிர்க்கட்சித் தலைவரை நியமிக்க வேண்டும் என்ற பெர்சாத்துவின் கோரிக்கையை பாஸ் யூத் நிராகரித்துள்ளது,

இந்த முக்கியமான கட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவரை மாற்றுவதற்குப் பதிலாக மக்களவையில் விவாதிக்கப்படும் முக்கியமான மசோதாக்களில் எதிர்க்கட்சித் கவனம் செலுத்த வேண்டும் என்று பாஸ் யூத் தகவல் தலைவர் நட்ஸிர் ஹெல்மி கூறினார்.

இந்த நேரத்தில் முன்னுரிமை நமது நாடாளுமன்ற விவாதங்கள் மூலம் மக்களின் உரிமைகளைப் பாதுகாப்பதாக இருக்க வேண்டும், எதிர்க்கட்சித் தலைவர் பதவி குறித்த சர்ச்சையாக இருக்கக்ப்கூடாது என்று அவர் ஒரு அறிக்கையில் கூறினார்.

மக்களவை கூட்டத்திற்குப் பிறகு எதிர்க்கட்சித் தலைவர் பதவி குறித்த கேள்வியை PN-க்குள் ஒரு ஒழுங்கான முறையில் தீர்த்து வைக்க முடியும் என்று நட்ஸீர் மேலும் கூறினார்.

கூட்டணியின் நிலைத்தன்மைக்காக PAS மற்றும் PN தலைமைகள் இந்த விஷயத்தில் முதிர்ச்சியடைந்த முடிவை எடுக்க முடியும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார். 

இந்த முக்கியமான நேரத்தில், நாம் மக்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். பதவிகள் நமக்கு முன்னுரிமை அல்ல என்று தெரிவித்தார்.

முன்னதாக, பிப்ரவரி 13 அன்று பெர்சத்துவிலிருந்து நீக்கப்பட்ட போதிலும், ஹம்சா மக்களவையில் எதிர்க்கட்சியைத் தொடர்ந்து வழிநடத்துவார் என்று PN தலைமை கொறடா தக்கியுதீன் ஹசான் கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *