மக்களின் வாழ்க்கைச் செலவை சிந்தியுங்கள்! - திரெங்கானு மந்திரி பெசார்

top-news
FREE WEBSITE AD

திரெங்கானு, ஜூன் 13: இலக்கு நிர்ணயிக்கப்பட்ட டீசல் மானியங்களை செயல்படுத்துவது மக்களிடையே பாதிப்பை  ஏற்படுத்தாமல் இருப்பதை அரசாங்கம் உறுதி செய்ய வேண்டும் என்று திரெங்கானு மந்திரி பெசார் அமாட் சம்சூரி மொக்தார் கேட்டுக்கொண்டுள்ளார்.

டீசல் விலை திடீரென உயர்த்தப்பட்டதால், பல துறைகளில் வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், பல நிறுவனங்கள் விலை உயர்வை அறிவித்துள்ளதாகவும் சம்சூரி கூறினார்.

கசிவுகள் மற்றும் விரயங்களை நிவர்த்தி செய்ய இலக்கு மானியங்கள் அவசியம் என்றபோதிலும்,  அதன் விளைவுகளை,  குறிப்பாக  மக்களின் வாழ்க்கைச் செலவு குறித்து மத்திய அரசு பரிசீலிக்க வேண்டும் என்று அவர் கூறினார்!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *