மத்தியில் ஆட்சிக்கு வர இந்த தேர்தல் வெற்றி மிக முக்கியம்! - ஜாஹிட் ஹமிடி

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், ஜூலை 3: அடுத்த பொதுத்தேர்தலில் பாரிசான் கூட்டணி மீண்டும் மத்தியில்  ஆட்சிக்கு வர, ஜொகூர் மாநிலத் தேர்தலில் கிடைக்கும் வெற்றி மிகவும் முக்கியமானது என்று பாரிசான் நேஷனல் தலைவர் அஹ்மத் ஜாஹிட் ஹமிடி கூறினார்.

பக்காத்தான் தலைமையிலான ஒற்றுமை அரசாங்கத்தில் பாரிசான் நேஷனல் தற்போது அங்கம் வகிக்கிறது.

ஜொகூரில் பாரிசான் நேஷனல் பெறும் வெற்றி, நெகிரி செம்பிலான் மற்றும் மலாக்கா மாநிலத் தேர்தல்களுக்கு முன்னதாக உத்வேகத்தை உருவாக்கும் என்று ஜாஹிட் குறிப்பிட்டார்.

அடுத்தடுத்த மாநிலத் தேர்தல்களுக்கு ஜொகூர் ஒரு முன்மாதிரியாக அமையும் என்றும் அவர் கூறினார்.

மாநிலத் தேர்தல்களைத் தொடர்ந்து 16-வது பொதுத் தேர்தல் நடைபெறும் என்றும் அவர் கூறினார்.

இந்த மூன்று மாநிலங்களில் கிடைக்கும் வெற்றிகள், நாடு முழுவதும் உள்ள பாரிசான் நேஷனல் தலைமை மற்றும் அதன் நிர்வாகத்திற்கு உத்வேகம் அளித்து, ஒரு புதிய தேசிய அரசியல் களத்தில்  முன்னணியில் இருக்க உதவும் என்று நம்புவதாக அவர் கூறினார்!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *