இது தீங்கிழைக்கும் குற்றச்சாட்டு!

top-news
FREE WEBSITE AD

பெட்டாலிங் ஜெயா, செப் 12: சிலாங்கூர் மற்றும் நெகிரி செம்பிலானில் உள்ள சமூக நல இல்லங்களில் நேற்று காவல்துறை நடத்திய அதிரடிச் சோதனையில் 402 சிறார்கள் மீட்கப்பட்டனர். மேலும் சிறுவர்கள் துன்புறுத்தப்பட்டதாகவும், பாலியல் அத்துமீறல் நிகழ்ந்துள்ளதாகவும் காவல்துறை தெரிவித்தது. இந்நிலையில், காவல்துறையின் அக்கூற்றினை   நிறுவனம் ஒன்று  மறுத்துள்ளது.

Global Ikhwan Services & Business Holdings  என்ற அந்நிறுவனம் காவல்துறையின் குற்றச்சாட்டு தீங்கிழைக்கும் ஒரு தீவிரமான குற்றச்சாட்டு என்று தெரிவித்துள்ளது,.

இந்த சமூக நல இல்லங்கள் குளோபல் இக்வான் சர்வீசஸ் & பிசினஸ் ஹோல்டிங்ஸ் நிறுவனத்தால் இயக்கப்படவில்லை என்பதால், இந்தக் குற்றச்சாட்டுகளை தாங்கள் மறுப்பதாகத் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக காவல்துறை அறிக்கை தாக்கல்செய்யப்படும் என்றும், சம்பந்தப்பட்டவர்கள் நீதிமன்றத்தில் நிறுத்தப்படுவார்கள் என்று அது ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *