இது சண்டைபோடும் நேரம் அல்ல! - அன்வார்

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், ஏப் 28: தற்போதைய பொருளாதார சவால்களுக்கு மத்தியில் நல்லிணக்கத்திற்கும் நிலைத்தன்மைக்கும் முன்னுரிமை அளிக்குமாறு நெகிரி செம்பிலான் பாரிசான் நேஷனலுக்கு பிரதமர் அன்வார் இப்ராஹிம் அழைப்பு விடுத்துள்ளார். மேலும், பதவிகளுக்காகப் போராடுவதற்கு இது சரியான நேரமல்ல என்றும் அவர் கூறியுள்ளார்.

பக்காத்தான் ஹரப்பான் தலைவரான அன்வார், நெகிரி செம்பிலானில் நிலவும் அரசியல் நெருக்கடியைத் தீர்ப்பது எளிதானதல்ல என்றும் கூறினார்.

 தம்மைப் பொறுத்தவரை, நாம் நல்லிணக்கத்தைப் பேண வேண்டும். நமது நாடு பொருளாதாரப் பிரச்சினைகளையும் உலகளாவிய நெருக்கடிகளையும் எதிர்கொண்டுள்ளது. இது (பதவிகளுக்காக) சண்டையிடுவதற்கோ அல்லது பதட்டங்களை உருவாக்குவதற்கோ ஆன நேரமல்ல  என்று அவர் செய்தியாளர்களிடம் கூறினார்!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *