இது படுகொலைக்குச் சமம்! ஹம்ஸா குற்றச்சாட்டு!

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், ஜூன் 6: தனது மகன் பைசால் மீது சுமத்தப்பட்ட ஊழல் குற்றச்சாட்டு, அவரது அரசியல் தன்மையைப் படுகொலை செய்வதற்கான சதித்திட்டத்தின் ஒரு பகுதி என்று எதிர்க்கட்சித் தலைவர் ஹம்சா ஜைனுடின் தெரிவித்துள்ளார்.

பெர்சாத்து தலைவர்களின் நற்பெயரையும் கண்ணோட்டத்தையும் கெடுக்க அன்வார் இப்ராஹிம் நிர்வாகம் மேற்கொண்ட சமீபத்திய முயற்சி இது என்று பெரிகாத்தான் தேசியச் செயலாளருமான அவர் குற்றம் சாட்டினார்.

தனது மகன் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டு, எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் தன்னைக் குறிவைத்து நடத்தப்பட்ட தொடர் அரசியல் படுகொலைகளின் ஒரு பகுதியாகும் என்று அவர் கூறினார்.

முன்னதாக, 100,000 வெள்ளி லஞ்சம் பெற்ற குற்றச்சாட்டின் பேரில்  ஹம்ஸாவின்  மகன் கோலாலம்பூரில் உள்ள அமர்வு நீதிமன்றத்தில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *