தோனியும் நானும்  விளையாடுவது இதுவே கடைசி - விராட் கோலி!

top-news
FREE WEBSITE AD

 தன்னுடைய முன்னாள் இந்திய கேப்டனான எம்எஸ் தோனியும் தாமும் ஐபிஎல் தொடரில் எதிரெதிர் அணிகளில் விளையாடுவது இதுவே கடைசியாக இருக்கலாம் என்று விராட் கோலி தெரிவித்துள்ளார். எனவே ஒன்றாக விளையாடிய பழைய நினைவுகளை மறக்க மாட்டேன் என்று நெகிழ்ச்சியை வெளிப்படுத்தும் விராட் கோலி போட்டியில் கடைசி வரை நின்றால் தோனி வெற்றிகரமாக ஃபினிஷிங் செய்வார் என்று பாராட்டியுள்ளார்.

அதையே தாமும் உத்வேகமாக எடுத்துக் கொண்டு விமர்சனங்களை பற்றி கவலைப்படாமல் விளையாடுவதாக தெரிவிக்கும் அவர் இது பற்றி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் பேசியது பின்வருமாறு. “இந்தியாவின் எந்த மைதானத்திலும் தோனி விளையாடுவதை பார்ப்பது ரசிகர்களுக்கு பெரிய விஷயமாகும். நானும் அவரும் விளையாடுவது இதுவே கடைசியாக இருக்கலாம் என்பது உங்களுக்குத் தெரியாது”

எனவே இது ஸ்பெஷலான விஷயமாகும். நாங்கள் மகத்தான நினைவுகளை கொண்டுள்ளோம். இந்தியாவுக்காக சில அற்புதமான பார்ட்னர்ஷிப் அமைத்துள்ளோம். எனவே இப்போட்டியில் எங்களை ஒன்றாக பார்ப்பது ரசிகர்களுக்கு சிறப்பாக இருக்கும். மஹி பாய் பற்றியும் “அவர் ஏன் போட்டியை 20 அல்லது 50 ஓவர் வரை எடுத்துச் செல்கிறார்?” என்று மக்கள் விமர்சித்துள்ளனர்”

ஆனால் அவர் இந்தியாவுக்காக எத்தனை போட்டிகளை ஃபினிஷிங் செய்துள்ளார் என்பதை பார்க்க வேண்டும். அந்த வகையில் என்ன செய்கிறோம் என்பது தோனிக்கு மட்டுமே தெரியும். அங்கிருந்து அவர் பலமுறை வெற்றிகரமாக போட்டியை ஃபினிஷிங் செய்துள்ளார். எனக்கு அது மறக்க முடியாத நினைவாகும். கடைசி வரை நின்றால் நம்மால் போட்டியை ஃபினிஷிங் செய்ய முடியும் என்பது தோனிக்கு தெரியும்” என்று விராட் கோலி கூறினார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *