நட்பாக இருந்தாலும் வாழ்த்து சொல்லாத காரணம் இதுதான் - பாகிஸ்தான் அரசு!

top-news
FREE WEBSITE AD

இந்திய நாட்டின் பிரதமராக 3-வது முறை நரேந்திர மோடி இன்று பதவியேற்கும் நிலையில் உலக தலைவர்கள் பலரும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

ஆனால் இதுவரை பாகிஸ்தான் மட்டும் அவருக்கு வாழ்த்து கூறவில்லை. இந்நிலையில் பிரதமராக பொறுப்பேற்கும் நரேந்திர மோடிக்கு வாழ்த்து கூறாதது தொடர்பாக பாகிஸ்தான் அரசு புது விளக்கம் அளித்துள்ளது. இது தொடர்பாக பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் மும்தாஜ் ஜாக்ராவிடா கூறியதாவது,

இந்திய மக்களுக்கு அவருடைய தலைவரை தேர்ந்தெடுக்கும் உரிமை உள்ளது. இந்தியாவின் தேர்தல் நடைமுறைகள் குறித்து நாங்கள் எந்த கருத்து கூற முடியாது. புதிய அரசு பதவி ஏற்காததால் இந்திய பிரதமருக்கு வாழ்த்து தெரிவிப்பது குறித்து பேசுவது முயற்சியற்றது. அதன்பிறகு இந்தியா உள்ளிட்ட அனைத்து நட்பு நாடுகளுடனும் பாகிஸ்தான் நட்பையே விரும்புகிறது. மேலும் காஷ்மீர் உள்ளிட்ட அனைத்து பிரச்சினைகளுக்கும் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணப்படும் என்று கூறியுள்ளார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *