கே ஜி எப்- பட இயக்குனர் விடா முயற்சி படப்பிடிப்பு தளத்தில் அஜித்தை சந்தித்தது இதற்கு தானா!

top-news
FREE WEBSITE AD

தமிழ் திரையுலகின் உச்சநட்சத்திரமாக இருப்பவர் நடிகர் அஜித். இவருக்கென்று கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். இவரது நடிப்பில் விடாமுயற்சி படம் உருவாகி வருகிறது. மேலும், குட்பேட் அக்லி திரைப்படத்தின் படப்பிடிப்பும் நடைபெற்று வருகிறது. இதற்கிடையே, கே.ஜி.எஃப். படம் மூலம் இந்தியா முழுவதும் கன்னட சினிமாவை திரும்பி பார்க்க வைத்தவர் பிரசாந்த் நீல். இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடிகர் அஜித்தை விடாமுயற்சி படப்பிடிப்பின் இடைவெளியில் சந்தித்தார். அந்த சந்திப்பின்போது பிரசாந்த் நீல் – அஜித் கூட்டணியில் இரண்டு படங்கள் உருவாவது குறித்து பேசப்பட்டுள்ளது.

இந்நிலையில், அதுதொடர்பான புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது, குட் பேட் அக்லி திரைப்படத்திற்கு பிறகு பிரசாந்த் நீல் இயக்கவுள்ள திரைப்படம் ஒன்றில் நடிகர் அஜித் நடிக்க உள்ளார். அந்த படத்திற்கு பிறகு நடிகர் அஜித்தை இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கவுள்ளார். இந்த இரண்டு படங்களுக்காகவும் பிரசாந்த் நீல் மொத்தம் 3 ஆண்டுகள் கால்ஷீட் கேட்டுள்ளதாக கூறப்படுகிறது.

மேலும், பிரசாந்த் நீல் அஜித்தை வைத்து இயக்கவுள்ள இரண்டாவது படத்தின் கிளைமேக்ஸ் காட்சியில் அஜித்தும், கே.ஜி.எஃப். மூலம் இந்தியா முழுவதும் பிரபலமான யஷ்ஷூம் இணைந்து நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

அதாவது, அந்த காட்சி பிரசாந்த் நீல் சினிமாட்டிக் யுனிவர்சின் கீழ் கொண்டு வர உள்ளதாகவும், கே.ஜி.எஃப். மூன்றாம் பாகத்திற்கான தொடக்க காட்சியாக அந்த படம் அமைந்துள்ளதாகவும் தகவல்கள் வௌியாகியுள்ளது.

மேலும், கே.ஜி.எப். 3ஆம் பாகத்தின் பிரதான காட்சிகளில் யஷ் மற்றும் அஜித் இணைந்து இருப்பது போல படம் உருவாக உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. இது அஜித் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பையும், மகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *