இவ்வாண்டு 27,674 மாணவர்களுக்கு PTPTN முன்பண கொடுப்பனவு ஒதுக்கப்பட்டுள்ளது!

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர் செப் 20: தேசிய உயர்கல்வி நிதிக் கழகம் PTPTN இந்த ஆண்டு உயர்கல்வி நிறுவனங்களில் சேருவதற்காக 27,674 மாணவர்களுக்கு RM41.5 மில்லியன் கடன் முன்பணக் கொடுப்பனவை (WPP) ஒதுக்கியுள்ளது.

UPUOnline அல்லது பொது பல்கலைக்கழக சேர்க்கை போர்டல் மூலம் பொது உயர்கல்வி நிறுவனங்களில் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கும்போது உதவி பெற ஒப்புக்கொள்ளும் மலேசிய மாணவர்களுக்கு WPP வழங்கப்படுகிறது என்று அதன் தலைவர் டத்தோஸ்ரீ நோர்லிசா அப்துல் ரஹீம் கூறினார்.

மாணவர்களின் பெற்றோர் அல்லது பாதுகாவலர்கள் STR உதவி பெறுபவர்கள் என்றும், PTPTN நிர்ணயித்த தகுதி அளவுகோல்களை பூர்த்தி செய்பவர்கள் என்றும் அவர் மேலும் கூறினார்.

"பொது பல்கலைக்கழகம் அல்லது பாலிடெக்னிக்கில் நுழைவதற்கான ஆரம்ப தயாரிப்பாக, நிதிச் சுமைகளைக் குறைத்து, அவர்களின் நலனைப் பாதுகாக்க, ஒவ்வொரு தகுதியுள்ள மாணவரும் RM1,500 பெறுவார்கள்.

மாணவர்கள் உயர்கல்வியில் தங்கள் பயணத்தைத் தொடங்கும்போது, ​​அவர்களின் நலனில் PTPTN எப்போதும் கவனம் செலுத்துகிறது.

படிப்பின் ஆரம்ப கட்டத்தில் நிதிச் சுமைகளைக் குறைப்பதில் அரசாங்கத்தின் அக்கறையை இந்த வசதி நிரூபிக்கிறது.

வாழ்க்கைச் செலவு அல்லது கட்டணங்களைப் பற்றி கவலைப்படாமல் ஒவ்வொரு மாணவரும் தங்கள் படிப்பைத் தொடங்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம என்று அவர் இன்று ஒரு அறிக்கையில் கூறினார்.

நிதிக் கட்டுப்பாடுகள் காரணமாக கல்வியைத் தொடர்வதில் எந்த மாணவரும் பின்தங்கியிருக்கக்கூடாது என்பதை உறுதி செய்வதில் PTPTN உறுதிபூண்டுள்ளது என்று நோர்லிசா மேலும் கூறினார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *