டிரம்ப் மீது துப்பாக்கிச்சூடு! அன்வார் கண்டனம்!

top-news
FREE WEBSITE AD

செர்டாங்‌, ஜூலை 15: கருத்து வேற்றுமைகளை வன்செயல்‌ மூலம்‌ தீர்க்க நினைக்கக்‌ கூடாது என்று அமெரிக்காவின்‌ முன்னாள்‌ அதிபர்‌ டொனால்டு டிரம்புக்கு எதிராக சனிக்கிழமை மேற்கொள்ளப்பட்ட படுகொலை முயற்சி பற்றி கருத்துரைத்தபோது பிரதமர்‌ டத்தோஸ்ரீ அன்வார்‌ இப்ராஹிம்‌ தமது கண்டனத்தை தெரிவித்தார்‌.

டிரம்ப்‌ மீதான தாக்குதல்‌ பற்றி தொடக்ககட்ட தகவல்கள்‌ எங்களுக்குக்‌ கிடைத்துள்ளன. ஒரு தலைவர்‌ மீது எந்தவொரு நிலைப்பாட்டை நாம்‌ கொண்டிருந்தாலும்‌ இதுபோன்ற வழிமுறை தீர்வு ஆகாது என்று அன்வார் கூறினார். எனவே, டிரம்புக்கு எங்களின்‌ அனுதாபத்தைத்‌ தெரிவித்துக்‌ கொள்கிறோம்‌.

பென்சில்வேனியாவில்‌ தேர்தல்‌ பிரச்சாரமொன்றில்‌ டிரம்பை நோக்கி பல தடவை சுடப்பட்டது. அதில் ஒரு தோட்டா அவரின்‌ வலது காதை உராய்ந்தபடி சென்றது. இதனால்‌, காதிலிருந்து ரத்தம்‌ கொட்டியது. அந்த

துப்பாக்கிச்‌ சூட்டில்‌ பொதுமக்களில்‌ ஒருவர்‌ உயிரிழந்ததோடு இருவர்‌ காயமுற்றனர்‌. தாக்குதல்காரனும்‌ அங்கேயே சுட்டுக்‌ கொல்லப்பட்டான்‌!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *