இன்னும் மூடிய நிலையில் கடைகள்... தொடரும் மஸ்ஜிட் இந்தியா சோகம்!

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், ஆகஸ்ட் 27: கோலாலம்பூர், மஸ்ஜிட் இந்தியாவில் எட்டு மீட்டர் ஆழமுள்ள பள்ளத்தில் விழுந்த 48 வயதான இந்திய மாது விஜயலெட்சுமியைத் தேடும் நடவடிக்கை இன்று ஐந்தாவது நாளை எட்டியது.

இந்நிலையில் இன்றும் காலை 9 மணியிலிருந்தே தீயணைப்பு வீரர்கள், காவல்துறையினர் மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர். முன்னதாக நீரைப் பாய்ச்சி மீட்டெடுக்கும் நடவடிக்கை நேற்று இரவில் தொடங்கிய நிலையில், அதனால் எந்த முன்னேற்றமும் காணப்படவில்லை. சாதகமான முடிவு அமையட்டும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

காலை 9 மணி நிலவரப்படி, பெரும்பாலான வணிக வளாகங்கள் இன்னும் மூடப்பட்ட நிலையில்தான் காணப்பட்டதாக நமது செய்தியாளர் தெரிவித்தார்.

மீட்பு  நடவடிக்கையின் முன்னேற்றங்களைப் பின்தொடர்வதற்காக கிட்டத்தட்ட 50 ஊடகப் பணியாளர்கள் காலை 8 மணிக்கே தளத்தில் கூடியுள்ளனர்.


ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *