பெர்சாத்துவின் அந்த 7 பேர் தொகுதிகளைக் காலி செய்ய வேண்டும்!

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், ஜூன் 4: பெர்சாத்து கட்சியின் விதிகளுக்கு எதிராக செயல்பட்ட 7 பிரதிநிதிகள் தங்கள் தொகுதிகளைக் காலி செய்ய வேண்டும் வழக்கறிஞர் டத்தோ ஷம்சுடின் நவாவி தெரிவித்துள்ளார்

பிரதமருக்கு ஆதரவு தெரிவித்ததன் மூலம் அவர்கள் கட்சியின் சட்ட விதியை மீறிவிட்டனர். இதனால் அவர்களின் உறுப்பினர் பதவி பறிக்கப்பட்டுள்ளதாகக் கட்சி தெரிவித்து விட்டது. எனவே, நாடாளுமன்ற சபாநாயகர் அந்த 7 பேரின் தொகுதிகளைக் காலி செய்ய அறிவுறுத்த வேண்டும் என்று அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மத்திய அரசியலமைப்புச் சட்ட விதிகளுக்கு சபாநாயகர்  கீழ்ப்படிய வேண்டும்.  மக்கள் பிரதிநிதிகளின் உறுப்பினர் பதவி எப்படிப் பறிக்கப்பட்டது என்பதை விசாரிக்க அவருக்கு உரிமை இல்லை. அது கட்சியின் வேலை. சபாநாயகர் கட்சி விவகாரங்களில் தலையிடக்கூடாது என்று அவர் கூறினார்!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *