அரசாங்கத்தை வீழ்த்த விரும்புவோர் சரியான நடைமுறையைக் கடைபிடியுங்கள்.... மக்களைத் தூண்டாதீர்கள்! – அன்வார்

top-news
FREE WEBSITE AD

 செபராங் பிராய், ஜூலை 19: பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம், புத்ராஜெயாவை கைப்பற்ற விரும்பினால், மக்களவையில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருமாறு தனது விமர்சகர்களுக்கு சவால் விடுத்துள்ளார்.

ஒரு தேசத்தைக் கட்டியெழுப்ப நேரம் எடுக்கும், ஆனால் "அதை இடிப்பது எளிது" என்று அவர் கூறினார்.

அரசாங்கத்தை வீழ்த்த விரும்புவோர் இருக்கிறார்கள் என்பது எனக்குத் தெரியும். அது உங்கள் உரிமை, ஆனால் சரியான நடைமுறையைப் பின்பற்றுங்கள் என்று அவர் சுட்டிக்காட்டினார்.

நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வாருங்கள். உங்களுக்கு போதுமான ஆதரவு இல்லையென்றால், பொதுத் தேர்தலுக்காகக் காத்திருங்கள்.

தெரு ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடவோ அல்லது பொதுமக்களைத் தூண்டிவிடவோ வேண்டாம்  என்று அவர் இன்று ஸ்டேடியம் பத்து காவானில் நடைபெற்ற தேசிய ஒற்றுமை வார கொண்டாட்டத்தில் கூறினார்.

அன்வாரின் ராஜினாமாவை வலியுறுத்தக் கோரி, வரும் ஜூலை 26 ஆம் தேதி தூருன் அன்வார் என்ற வெகுஜன பேரணியை நடத்த பெரிகாத்தான் நேஷனல் (பிஎன்) திட்டமிட்டுள்ளது!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *