ஆயிரக்கணக்கில் பணியாளர்களைக் குறைக்கும் ஹெச்.பி நிறுவனம்
- Tamil Malar (Reporter)
- 26 Nov, 2025
செய்தி - வெற்றி மைந்தன்
அமெரிக்கா, நவ. 26-
அமெரிக்காவின் கம்ப்யூட்டர், பிரிண்டர் உற்பத்தியில் முன்னணி நிறுவனமான ஹெச்.பி நிறுவனம், நேற்று பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தும் அறிவிப்பை வெளியிட்டது. உலகளவில் அதன் பணியாளர்களில் சுமார் 10 சதவீதத்தை – அதாவது 4,000 முதல் 6,000 பேரை – வெளியேற்றும் பெரிய அளவிலான மறுசீரமைப்பு திட்டத்தை அமல்படுத்த உள்ளதாக அறிவித்துள்ளது. இந்த நடவடிக்கை 2028 நிதியாண்டு இறுதிக்குள் முடிவடையும் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த முடிவின் பின்னணியில், கம்ப்யூட்டர் சிப் விலைகளில் ஏற்பட்ட பெரும் உயர்வும், கூடுதலாக புதுமுன்னெடுப்புகளில் ஏற்படும் செலவுகளும் உள்ளன. ஏனெனில், ஏ.ஐ. தரவு மையங்களுக்கான தேவை அதிகரிப்பால் நினைவக சிப் விலைகள் வெகு உயர்ந்துள்ளன. இதன் விளைவாக,ஹெச்.பி தனது விலையில்லா வருவாய் 5.7 சதவீதம் குறைந்ததாகவும், ஆண்டு வருவாய் 55.3 பில்லியன் டாலர்களாக இருந்தாலும், இலக்குகளை அடைய முடியவில்லை என்றும் கூறுகிறது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



