கிள்ளான் துப்பாக்கிச் சூடு தொடர்பாக மூவர் கைது!
- Shan Siva
- 14 Nov, 2025
ஷா ஆலம், நவ 14: கடந்த வெள்ளிக்கிழமை கிள்ளான் புக்கிட் திங்கியில்
உள்ள ஒரு பெட்ரோல் நிலையத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் காரில் அமர்ந்திருந்த
ஒருவர் கொல்லப்பட்டது தொடர்பாக போலீசார் மூன்று பேரை கைது செய்துள்ளனர்.
19 முதல் 35
வயதுக்குட்பட்ட சந்தேக நபர்கள் கிள்ளானைச் சுற்றுவட்டாரத்தில் கைது செய்யப்பட்டு, நவம்பர் 17 வரை காவலில் வைக்கப்பட்டுள்ளதாக சிலாங்கூர்
காவல்துறைத் தலைவர் ஷாசெலி கஹார் தெரிவித்தார்.
இன்று நடந்த
செய்தியாளர் சந்திப்பில், போலீசார் இந்த
வழக்கை அனைத்து கோணங்களிலும் விசாரித்து வருவதாக ஷாசெலி கூறினார்.
இரவு 11
மணியளவில் நடந்த இந்த சம்பவத்தில், ஒரு நபர் ஒரு
காரின் முன்பக்கத்தில் பல முறை துப்பாக்கிச் சூடு நடத்தி, உள்ளே அமர்ந்திருந்த பாதிக்கப்பட்டவரைத் தாக்கியதாக ஷாசெலி
முன்பு கூறியிருந்தார்.
34 வயதான
பாதிக்கப்பட்டவர் பாதுகாப்பு குற்றங்கள் (சிறப்பு நடவடிக்கைகள்) சட்டம் 2012 இன்
கீழ் தேடப்படும் நபர் என்றும், பல குற்றச்
செயல்களுக்கான பதிவு இருப்பதாகவும் அவர் கூறினார்!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



