மூன்று முன்னாள் வங்கி அதிகாரிகள் நீதிமன்றத்தில் ஆஜர்!
- Muthu Kumar
- 14 Nov, 2025
கோலாலம்பூர், நவ 14:
லஞ்சம் பெற்று அதிகாரிகளிடம் புகார் அளிக்கத் தவறிய குற்றச்சாட்டில், ஷா ஆலம் அமர்வு நீதிமன்றத்தில் நேற்று மூன்று முன்னாள் வங்கி அதிகாரிகள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
வங்கி விற்பனை மேலாளரான நோர்மசிதோ, RM40 மில்லியனுக்கும் அதிகமான மதிப்புள்ள 127 கடன் ஒப்பந்தங்களைத் தயாரிக்க பரிந்துரைத்ததற்காக ஒரு சட்ட நிறுவனத்திடமிருந்து RM146,360 லஞ்சம் பெற்றதாகக் கூறப்படுகிறது.
மற்றொரு வங்கியில் நுகர்வோர் விற்பனை நிர்வாகியான ஷாருல் அஃபெண்டி, RM1.08 மில்லியன் மதிப்புள்ள நான்கு கடன் ஒப்பந்தங்களைத் தயாரிக்க நிறுவனத்தைப் பரிந்துரைத்ததற்காக வெகுமதியாக அதே சட்ட நிறுவனத்திடமிருந்து RM4,270 லஞ்சம் பெற்றதாகக் கூறப்படுகிறது.
மற்றொரு வங்கியில் உதவி விற்பனை மேலாளரான சே அஸ்ரி, RM503,500 மதிப்புள்ள இரண்டு வீட்டுக் கடன் ஒப்பந்தங்களைத் தயாரிக்க நிறுவனத்தைப் பரிந்துரைத்ததற்காக வெகுமதியாக அதே சட்ட நிறுவனத்திடமிருந்து RM3,414 லஞ்சம் பெற்றதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.இதற்கு அதிகபட்சமாக 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



