பாகோவில் வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் மூவர் பலி!

top-news
FREE WEBSITE AD

மூவார், ஆகஸ் 9: பாகோவில் உள்ள கம்போங் பாயா ரெடானில் உள்ள ஒரு வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் வயதான தம்பதியர் மற்றும் அவர்களது 11 வயது பேத்தி உயிரிழந்தனர்.

இன்று அதிகாலை 1.30 மணியளவில் நடந்த இச்சம்பவம் குறித்து போலிஸாருக்குத் தகவல் கிடைத்ததாக Muar மாவட்ட காவல்துறை தலைவர், உதவி ஆணையர் Raiz Mukhliz Azman Aziz கூறினார்.

வயதான தம்பதியர் சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது, அதே நேரத்தில் சுல்தானா ஃபாத்திமா சிறப்பு மருத்துவமனையில் அவர்களது பேத்தி காலமானார் என்று அவர் ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.

வீட்டில் இருந்த 14 வயது இளம்பெண், தலையில் காயம் அடைந்து அதே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

அதிகாலை 4.15 மணியளவில் தீ  கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. மரத்தாலான அந்த வீடு 85% எரிந்துவிட்டது என்று அவர் கூறினார்! 

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *