பிரதமர் வேட்பாளரை ஏன் இன்னும் அறிவிக்கவில்லை? இதுதான் காரணம் - ஹாடி அவாங்

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், அக் 15: பெரிகாத்தான் நேஷனல் (பிஎன்) தனது பிரதமர் வேட்பாளரை பாதுகாப்பு காரணங்களுக்காக அறிவிக்கவில்லை என்றும், அவர்கள் போட்டியிடுவதைத் தடுக்க அந்த நபருக்கு லஞ்சம் கொடுக்கப்படலாம் அல்லது சிக்க வைக்கப்படலாம் என்றும் பாஸ் கட்சியின் தலைவர் டான் ஸ்ரீ அப்துல் ஹாடி அவாங் மக்களவையில் கூறினார்.

கூட்டணித் தலைவரைத் தேர்ந்தெடுப்பதில் நேர்மை மிக முக்கியமான காரணி என்று அவர் தெரிவித்தார்.

பிரதமர் வேட்பாளரை ஏன் இன்னும் அறிவிக்கவில்லை என்று சிலர் கேட்கலாம், இது அடிக்கடி எழுப்பப்படும் கேள்விதான்  என்று அவர் கூறினார்.

எங்களுக்கு மிகவும் முக்கியமானது நேர்மையான தலைவரைத் தேர்ந்தெடுப்பதுதான், அவர்கள் தேர்தலிலும் வெற்றி பெற வேண்டும். ஒருவர் வெற்றி பெறவில்லை என்றால் எப்படி பிரதமராக முடியும்? என்று அவர் வினவினார்.

சில நேரங்களில், பிரதமர் வேட்பாளர் யார் என்பதை மக்கள் கண்டுபிடிக்கும்போது, ​​அவருக்கு தங்கக் கட்டிகளால் லஞ்சம் கொடுக்க முயற்சி செய்யலாம், அவரது காரில் தங்கக் கட்டிகள் அல்லது போதைப்பொருட்களை வைக்கலாம், மேலும் அவர் போட்டியிட தகுதியற்றவராக ஆக்கப்படலாம் என்று ஹாடி கூறினார்.

மேலும், பெரிக்காத்தான் நேஷனல் ஆட்சிக்கு தலைமை தாங்கும் அதிகாரம் வழங்கப்பட்டால், இஸ்லாமிய கொள்கைகளை அறிமுகப்படுத்துவதன் மூலம் நாட்டின் தலைமைத்துவத்தில் மாற்றத்தைக் கொண்டுவர முயற்சிக்கும் என்றும் அப்துல் ஹாடி கூறினார்.

வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்களோ இல்லையோ, அவர்களின் அறிவு, ஒழுக்கம் மற்றும் குணாதிசயங்களின் அடிப்படையில் மதிப்பிடப்படுகிறார்கள், இது அவர்களின் ஒட்டுமொத்த நேர்மையை பிரதிபலிக்கிறது என்று அவர் கூறினார்.

ஒரு ஒழுங்குமுறைக் குழுவும் உள்ளது, மேலும் கட்சி தொடர்பான அல்லது தனிப்பட்ட தவறான நடத்தை இருந்தால், அந்த நபரும் வெளியேற்றப்படலாம். நமக்கு குறைவான இடங்கள் இருந்தாலும், நாட்டில் மாற்றத்தைக் கொண்டுவர நாம் செய்யக்கூடிய முயற்சி இதுதான் என்று அவர் கூறினார்!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *