இரட்டை நிலை ஏன்? - லிம் குவான் எங்க் சீனப்பள்ளிகள் மதுபான நிறுவன நன்கொடை விவகாரம் குறித்து கேள்வி

top-news
FREE WEBSITE AD

பெட்டாலிங் ஜெயா, ஜூலை 29: சீனப் பள்ளிகளுக்கு மதுபான உற்பத்தி நிறுவனங்களிடம் இருந்து நிதி திரட்டுவதில் முஸ்லீம் அல்லாத பெற்றோர்கள் எந்தத் தவறும் செய்வதில்லை என்று டிஏபி தலைவர் லிம் குவான் எங் இன்று கூறினார்.

து குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், குழந்தைகளை மதுவில் இருந்து விலக்க வேண்டியதன் அவசியத்தை பெற்றோர்கள் உணர்ந்துள்ளனர். இருப்பினும், நிதிப் பற்றாக்குறையால் சீனப் பள்ளிகள் பாழடைந்த நிலையில் இருக்கும் நிலையில், இது மாணவர்களின் கற்றல், சுகாதாரம், பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வை பாதிக்கும் என்று அவர் கூறினார்.

முஸ்லீம் அல்லாத பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை வளர்ப்பதில் ஆரோக்கியமான நடைமுறைகள் என்ன என்பதைப் பற்றி பிறர் அறிவுரை கூறுவதில் கோபமாக உள்ளனர் என்று அவர் கூறினார். 

மேலும், இத்தகைய பள்ளிகள் பொது நன்கொடைகளை நம்பியே உள்ளன என்று குறிப்பிட்ட அவர், 2022 பட்ஜெட்டை மேற்கோள் காட்டினார்.  அந்த பட்ஜெட் சீன மற்றும் தமிழ்ப் பள்ளிகளுக்கு RM120 மில்லியனை ஒதுக்கியது – இது போதுமானதாக இல்லை என்று அவர் கூறினார். இறுதியில், 110 மில்லியன் ரிங்கிட் மட்டுமே வழங்கப்பட்டது.

மதுபான நிறுவனங்கலிடம் நிதி திரட்டும் பணியில் ஈடுபடுவதற்கு தாய்மொழிப் பள்ளிகளைக் கண்டிப்பவர்கள், மதுபான நிறுவனங்களின் இத்தகைய ஸ்பான்சர்ஷிப்பில் இருந்து வித்தியாசத்தை ஈடுசெய்ய கல்வி அமைச்சை நிர்பந்திக்காதது நகைப்புக்குரியது, என்று லிம் கூறினார்.

ந்த இரட்டை நிலை ஏன்? என்று அவர் கேள்வி எழுப்பினார்!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *