நடு வானில் திருட்டு!

top-news
FREE WEBSITE AD


கோலாலம்பூர், ஜூலை 20: கோலாலம்பூரில் இருந்து வியட்நாமின் ஹோ சி மின் நகருக்கு ஏர் ஏசியா விமானத்தில் பயணித்த மூன்று பயணிகளின் ரொக்கம் மற்றும் கிரெடிட் கார்டுகள் திருடப்பட்டதை கண்டு விமானப் பயணிகள் அதிர்ச்சியுற்றனர். நடுவானில் இந்தத்  திருட்டு சம்பவம் நடந்துள்ளது.

இந்தச் சம்பவம் இன்ஸ்டாகிராமில் ஒரு  வைரலான வீடியோவில் பதிவாகியுள்ளது.

சக  பயணி ஒருவர் சந்தேகத்திற்கிடமான முறையில் மேலே வைக்கப்பட்ட தங்களது பொருள்களை இரண்டு முறை அணுகுவதைப் பயணிகள் அவதானித்துள்ளனர்.

இறுதியில், ஒரு விமானப் பணிப்பெண், திருடனால் மறைத்து வைக்கப்பட்டிருந்த காலுறைகளில் சுற்றப்பட்ட ஒரு பெரிய தொகையைக் கண்டுபிடித்ததால் அத்திருட்டுச் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்தது.

வியட்நாமில் உள்ள டான் சோன் நாட் சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கியதும், பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் சந்தேக நபர்கள் இருவரும் விசாரணை அறைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

இதனை அடுத்து, உலகம் முழுவதும் நான்கு சந்தேக நபர்களின் குழு, இதேபோன்ற திருட்டுகளை மேற்கொள்வது விசாரணையில் தெரியவந்தது!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *