ஸாஹிட் என்னை விலக்கினாரா?! மகாதீர் விளக்கம்

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், ஆகஸ் 13: க்டந்த  2020ஆம்‌ ஆண்டில்‌ தம்முடைய நெருக்குதலினால்தான்‌ டாக்டர்‌ மகாதீர்‌ முகமது பிரதமர்‌ பதவியிலிருந்து விலகினார்‌ என்று அம்னோ தலைவர்‌ அமாட்‌ ஸாஹிட்‌ ஹமிடி சனிக்கிழமையன்று கூறியிருந்தார்‌. ஆனால்‌, அவரின்‌ அக்கூற்றை டாக்டர்‌ மகாதீர்‌ நேற்று திட்டவட்டமாக மறுத்தார்‌.

அந்நேரத்தில்‌ பெர்சாத்து கட்சியின்‌ தலைவராக நான்‌ பொறுப்பு வகித்து வந்தேன்‌. அக்கட்சியினர்‌ என்னுடைய அறிவுரையை மதிக்காத காரணத்தினால்தான்‌ மரியாதை கருதி அக்கட்சியிலிருந்து விலக வேண்டி வந்தது என்று தமது எக்ஸ்‌ தளப்‌ பதிவில்‌ டாக்டர்‌ மகாதீர்‌ குறிப்பிட்டுள்ளார்‌.

“அம்னோவைக்‌ காப்பாற்றுவதற்காகவே என்னைப்‌ பதவியிலிருந்து இறக்கியதாக ஸாஹிட்‌ மார்தட்டிக்‌ கொள்ளக்கூடாது. ஸாஹிட்‌ ஒரு மாவீரர்போல்‌ பாசாங்கு செய்யக்கூடாது. நீதிமன்றத்தில்‌ குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டுள்ள வெறும்‌ சாமானிய நபர்தான்‌ அவர்‌. துணைப்‌ பிரதமர்‌ பதவியையும்‌ தம்மையும்‌ காப்பாற்றிக்‌ கொள்வதற்காக அம்னோவின்‌ பரம எதிரியான ஜசெகவுடன்‌ ஒத்துழைக்கவும்‌ தயங்காத நபர்தான்‌ ஸாஹிட்‌ என்று‌ டாக்டர்‌ மகாதீர் பதிவிட்டுள்ளார்‌.

பிரதமர்‌ பதவியிலிருந்து டாக்டர்‌ மகாதீரை இறக்கியதற்குத்‌ தாம்‌ பின்னணியில்‌ இருந்து செயல்பட்டதாகவும்‌ அம்னோவின்‌ கட்சிப்‌ பதிவு ரத்தாகக்கூடாது என்பதற்காகவே அவ்வாறு செய்ததாகவும்‌ துணைப்‌ பிரதமருமான ஸாஹிட்‌ கூறினார்‌.கடந்த 2020ஆம்‌ ஆண்டு பிப்ரவரியில்‌ பிரதமர்‌ பதவியிலிருந்து டாக்டர்‌ மகாதீர்‌ விலகியதைத்‌ தொடர்ந்து அவரின்‌ தலைமையிலான பக்காத்தான்‌ அரசாங்கம்‌ கவிழ்ந்தது. அதனைத்‌ தொடர்ந்து புதிய அரசாங்கமொன்று அமைந்தது.  முன்னாள்‌ பிரதமர்‌ முஹிடின்‌ யாசின்‌ தலைமையில்‌ அந்த அரசாங்கம்‌ அமைந்தது!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *