கட்சி நிதியைத் நான் திருடினேனா? - குற்றச்சாட்டை மறுத்த முகைதீன் யாசின்!
- Muthu Kumar
- 13 Dec, 2025
கோலாலம்பூர், டிச 13:
முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதிர் முகமது கட்சி நிதியைத் திருடி பணத்தை தனது வீட்டில் வைத்திருந்ததாக கூறிய குற்றச்சாட்டை பெர்சாத்து தலைவர் முகைதீன் யாசின் மறுத்துள்ளார். இந்தக் கூற்று பொறுப்பற்றது மற்றும் முற்றிலும் ஆதாரமற்றது என்று அவர் விவரித்துள்ளார்.
மகாதிர் இடம்பெறும் வைரலான வீடியோவில் கூறப்பட்ட குற்றச்சாட்டு, பொறுப்பற்ற தரப்பினரால் வழங்கப்பட்டதாகக் கூறப்படும் ஊகங்கள் மற்றும் தவறான தகவல்களை அடிப்படையாகக் கொண்டது என்று முகைதீன் இன்று ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
கட்சி நிதியை தான் ஒருபோதும் தவறாகப் பயன்படுத்தவில்லை என்றும், கட்சிக்கான அனைத்து பங்களிப்புகளும் கட்சியின் பொருளாளரால் வெளிப்படையாக நிர்வகிக்கப்படும் அதிகாரப்பூர்வ கட்சி கணக்குகளில் டெபாசிட் செய்யப்படுவதாகவும் முகைதீன் வலியுறுத்தினார்.மகாதிர் இதுபோன்ற குற்றச்சாட்டுகளை பகிரங்கமாகச் சொல்வதற்கு முன்பு அவரிடம் விளக்கம் கேட்டிருக்க வேண்டும் என்றார்.
நான் அவருடன் நடத்திய பல சந்திப்புகளில், அவர் இந்த விஷயத்தை என்னிடம் நேரில் எழுப்பியதில்லை என்று முகைதீன் கூறினார்.தனது நற்பெயருக்கு சேதம் ஏற்படுவதைத் தடுக்கவும், அவதூறு பரவுவதைத் தவிர்க்கவும் இந்தப் பிரச்சினையை தெளிவுபடுத்த வேண்டிய கட்டாயத்தில் தாம் இருப்பதாக அவர் மேலும் கூறினார்.
குற்றச்சாட்டு இருந்தபோதிலும், மகாதீரை தொடர்ந்து மதிப்பதாகவும், மலாய் ஒற்றுமையை வளர்ப்பதற்கான அவரது முயற்சிகளை ஆதரிப்பதாகவும் அவர் கூறினார். அதனால், மகாதீருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கும் எண்ணம் தனக்கு இல்லை என்று அவர் தெரிவித்தார்.நேற்று, ஜோகூர் பெர்சாத்து இளைஞர் பிரிவு, மகாதீருடனான சமீபத்திய சந்திப்பின் போது பதிவு செய்யப்பட்ட ஒரு வீடியோ கிளிப்பை சில பொறுப்பற்ற தரப்பினர் சில தனிநபர்களின் அரசியல் நலனுக்காக தவறாகக் “கையாளப்பட்டதாக” கூறினார்.
முகைதீன் கட்சியின் நிதியைத் திருடியதாக மகாதீர் குற்றம் சாட்டியதாகக் கூறப்படும் கூட்டத்தின் இரண்டு நிமிட வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளது.வீடியோ திருத்தப்பட்டது. அதன் பின்னணியில் இருந்த நபர் (அசல்) பதிவை வெட்டிவிட்டார், எனவே அது தவறானது என்று ஜொகூர் பெர்சத்து யூத் தலைவர் அலியாஸ் ரஸ்மான் கூறியதாக மலேசியாகினி தெரிவித்துள்ளது.இதற்குப் பின்னால் யார் இருக்கிறார்கள் என்பது எனக்குத் தெரியும், நான் சட்ட நடவடிக்கை எடுப்பேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



