பிலிப்பைன்ஸுக்கு டீசலா? - முற்றுப்புள்ளி வையுங்கள்! - அன்வார்
- Shan Siva
- 13 Apr, 2026
கோலாலம்பூர், ஏப் 13: மலேசியா பிலிப்பைன்ஸுக்கு டீசலை ஏற்றுமதி செய்வதாகக்
கூறப்படும் குற்றச்சாட்டுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என பிரதமர் அன்வர்
இப்ராஹிம் அழைப்பு விடுத்துள்ளார்.
மணிலாவிற்கு சமீபத்தில்
அனுப்பப்பட்ட 329,000 பேரல்கள் டீசல், ஜொகூரின் பெங்கராங்கில் செயல்படும் வெளிநாட்டு
எரிசக்தி நிறுவனமான விட்டோல் (Vitol) நிறுவனத்திடமிருந்து வந்ததாக அவர் கூறினார்.
அந்த டீசல் பெட்ரோனாஸ் (Petronas)
நிறுவனத்திடமிருந்து வரவில்லை என்றும், பிலிப்பைன்ஸுக்கு விற்பனை செய்வதற்காக டீசலை
அனுப்பும் ஒரு வெளிநாட்டு ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாகவே விட்டோல் நிறுவனம் உள்ளது
என்றும் அன்வர் கூறினார்.
மலேசியாவிலிருந்து
பிலிப்பைன்ஸுக்கு சுமார் 329,000 பேரல்கள், அதாவது 52 மில்லியன் லிட்டர் டீசல் அனுப்பப்பட்டதாக பிலிப்பைன்ஸ்
செய்தி நிறுவனம் (Philippine News Agency) முன்னதாக செய்தி வெளியிட்டிருந்தது.
பிலிப்பைன்ஸுக்கு டீசல்
வழங்குவதில் தங்களுக்குத் தொடர்பில்லை என்று பெட்ரோனாஸ் மறுத்துள்ளதாக 'தி எட்ஜ்' பத்திரிகையும் செய்தி வெளியிட்டுள்ளது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



