தொழில்கல்லுரி மாணவியைக் கொலை செய்த மாணவருக்கு ஆயுள் தண்டனை & 12 பிரம்படிகள்!
- Shan Siva
- 28 Aug, 2025
கோலாலம்பூர், ஆக 28: 17 வயது நஸ்மி ஐசாத் நருல் அஸ்வானை கொலை
செய்ததற்காக, லஹாத் டத்து தொழிற்கல்லூரியைச் சேர்ந்த 20 வயது
மாணவருக்கு ஆயுள் தண்டனை மற்றும் 12 பிரம்படிகள் விதித்து தாவாவ் உயர் நீதிமன்றம்
இன்று தீர்ப்பளித்ததுதா
மார்ச் 2024 இல்
கல்லூரியில் நஸ்மியைக் கொலை செய்த வழக்கில், முன்னாள் மாணவர் கடந்த
வாரம் 12 பேருடன் சேர்ந்து குற்றவாளியாகக் கண்டறியப்பட்டார்.
சபா ஆளுநரின்
விருப்பப்படி, இன்னும் சிறார்களாக இருக்கும் மீதமுள்ள 12
பேரைக் காவலில் வைக்க நீதிபதி டங்கன் சிகோடோல் உத்தரவிட்டதாக பெரிட்டா ஹரியன்
தெரிவித்துள்ளது.
கொலைக்
குற்றச்சாட்டில் 13 இளைஞர்களும் கூட்டாக குற்றவாளிகள் என்று நீதிமன்றம்
தீர்ப்பளித்தது. அரசு தரப்பு தனது வழக்கை
சந்தேகத்திற்கு இடமின்றி
நிரூபித்துள்ளதாகக் கூறியது.
பாதிக்கப்பட்டவருக்கு
ஒரு பாடம் கற்பிக்க மட்டுமே பதின்ம வயதினர் விரும்பினர் என்ற பிரதிவாதியின் வாதம்
ஆதாரமற்றது என்று சிகோடோல் கூறினார். ஏனெனில் நஸ்மிக்கு ஏற்பட்ட காயங்கள் கடுமையானவை
மற்றும் மரணத்தை ஏற்படுத்தும் அளவுக்கு காயங்கள் இருந்துள்ளது என்று நீதிபதி கூறினார்.
மேலும், குற்றம் சாட்டப்பட்டவர் பாதிக்கப்பட்டவரைக் கொலை செய்ய விரும்பினாரா என்பது
முக்கியமல்ல, மாறாக ஏற்பட்ட உடல் காயங்கள் வேண்டுமென்றே
செய்யப்பட்டதா என்பதுதான் பிரச்சினை என்றும் அவர் கூறினார்.
நீதிமன்றத்தில்
சமர்ப்பிக்கப்பட்ட மருத்துவ சான்றுகள், காயங்கள் மரணத்திற்குக்
காரணமாக அமைந்தன என்பதைக் காட்டுகின்றன என்று அவர் சுட்டிக்காட்டினார்.
பாதிக்கப்பட்டவரால்
பதின்ம வயதினர் தூண்டிவிடப்பட்டனர் என்ற வாதம் போதுமானதாக இல்லை, ஏனெனில் அவர்களின் தாக்குதல் தன்னிச்சையான எதிர்வினை அல்ல, மாறாக நீண்ட காலமாக மீண்டும் மீண்டும் தாக்குதல்கள் நடத்தப்பட்டன என்றும் அவர்
கூறினார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



