ஹன்னா இயோவுக்கா ஆதரவாக உயர்நீதிமன்றம் தீர்ப்பு! - 4 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், மே 30: சிகாம்புட் நாடாளுமன்ற உறுப்பினர் ஹன்னா யோவுக்கு ஆதரவாக உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

மேலும் எட்டு ஆண்டுகளுக்கு முன்பு கூறியிருந்த அவதூறான கருத்துக்களுக்காக உத்தாரா மலேசியா பலகலைக்கழகத்தின்  (UUM) விரிவுரையாளர் டாக்டர் கமாருல் ஜமான் யூசோஃப் 4 லட்சம் வெள்ளியை இழப்பீடாக வழங்க உத்தரவிட்டுள்ளது.

நீதிபதி டத்தோ அலிசா சுலைமான் இந்த தீர்ப்பை வழங்கினார்.

ஹன்னா மதமாற்றும் நடவடிக்கையைக் கொண்டிருந்ததாகவும், கிறிஸ்தவத்தை முன்னேற்றுவதற்காக தனது அரசியல் தளத்தைப் பயன்படுத்துவதாகவும் கமாருல் ஜமான் கடந்த 2017 ஆம் ஆண்டு, மே 10 மற்றும் மே17 ஆகிய தேதிகளுக்கு  இடையில் முகநூலில் சர்ச்சை கருத்தினை பதிவிட்டதை அடுத்து, அவதூறு வழக்கு தொடரப்பட்டது.

ஹன்னாவின் சுயசரிதையான 'பிகமிங் ஹன்னா: எ பெர்சனல் ஜர்னி'ஐ அவரது கிறிஸ்தவ நிகழ்ச்சி நிரலுக்கு சான்றாக கமாருல் மேற்கோள் காட்டினார். மேலும் அவர் மலேசியாவை ஒரு கிறிஸ்தவ தேசமாக மாற்ற முயன்றதாகவும் குற்றம் சாட்டியிருந்தார்!

Mahkamah Tinggi memerintahkan pensyarah UUM, Dr. Kamarul Zaman membayar RM400,000 kepada Ahli Parlimen Segambut, Hannah Yeoh, atas kenyataan fitnah berhubung agama yang dibuat pada 2017 melalui Facebook berkaitan buku autobiografi beliau.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *