மலேசியா கிண்ண காலிறுதி ஆட்டத்துக்கு எட்டு அணிகள் தகுதி !

top-news
FREE WEBSITE AD

(தி.ஆர்.மேத்தியூஸ்)

பினாங்கு, டிச. 11-

தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் 2024-2025 மலேசிய கிண்ண காலிறுதி ஆட்டத்திற்கு 8 அணிகள் தங்களின் இடத்தை உறுதி செய்து கொண்டுள்ளன.பதினாறு சுற்றுகள் நடைபெற்ற ஆட்டங்களில் சிறப்பான வெற்றியுடன்,திரெங்கானு எப்சி,சபா எப்சி,ஸ்ரீ பகாங் எப்சி,ஜெடிதி,கேஎல் சிட்டி,பேராக் எப்சி,நெகிரி செம்பிலான் எப்சி மற்றும் கூச்சிங் சிட்டி எப்சி ஆகிய அணிகள் காலிறுதி ஆட்டங்களில் விளையாடுவதற்கான இடத்தை உறுதி செய்து கொண்டுள்ளன.

முதல் சுற்று காலிறுதி ஆட்டங்கள் 2024 டிசம்பர் 12,13 மற்றும் 15 -ஆம் தேதிகளிலும்,இரண்டாம் சுற்று ஆட்டங்கள் டிசம்பர் 21 மற்றும் 22 -ஆம் தேதிகளில் நடைபெறும்.காலிறுதி ஆட்டங்களில் சூப்பர் லீக் வெற்றியாளரான ஜெடிதி,கேஎல் சிட்டியையும்,நெகிரி செம்பிலான் எப்சி,திரெங்கானு எப்சியையும், ஸ்ரீ பகாங் எப்சி,பேராக் எப்சியையும் சபா எப்சி,கூச்சிங் சிட்டி எப்சியையும் சந்தித்து விளையாடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையில், கடந்த ஆண்டு சூப்பர் லீக் இரண்டாம் நிலை வெற்றியாளரும் இந்த எப்ஏ கிண்ண இரண்டாம் நிலை வெற்றியாளருமான சிலாங்கூர்,ஸ்ரீ பகாங் அணியிடம் தோல்வியடைந்து காலிறுதிக்கு தகுதிப் பெறாமல் வெளியேறியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.இந்த ஆண்டுக்கான மலேசிய கிண்ண இறுதியாட்டம் 2025 ஏப்ரலில் புக்கிட் ஜாலில் தேசிய அரங்கில் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *