ஆசியான் முழுவதும் டிஜிட்டல் மயமாக்கல்! - அன்வார்

- Shan Siva
- 22 May, 2025
புத்ராஜெயா, மே
22: ஆசியான் முழுவதும் டிஜிட்டல்மயமாக்கல் மற்றும் செயற்கை நுண்ணறிவின் வளர்ச்சியை
அரசாங்கம் தொடர்ந்து ஆதரிக்கும், இதனால் பிராந்தியத்தை ஒரு
போட்டித்தன்மை வாய்ந்த மற்றும் எதிர்காலத்தை நோக்கிய டிஜிட்டல் மையமாக நிலைநிறுத்த
முடியும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.
மலேசியாவின் டிஜிட்டல் நோக்கம் உள்நாட்டு
வளர்ச்சிக்கு மட்டுமல்ல, அனைத்து ஆசியான் உறுப்பு
நாடுகளுக்கும் பயனளிக்கும் ஒரு வலுவான, ஒருங்கிணைந்த
பிராந்திய சுற்றுச்சூழல் அமைப்பை உருவாக்குவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது என்று அன்வார்
கூறினார்.
நமது அண்டை நாடுகளில் டிஜிட்டல்மயமாக்கல் மற்றும் AI இன் வளர்ச்சியையும் மலேசியா தொடர்ந்து ஆதரிக்கும். ஏனெனில் மலேசியா மட்டுமல்ல, ஆசியான் மிகவும் போட்டித்தன்மை வாய்ந்த டிஜிட்டல் மையமாக மாற வேண்டும் என்று தாங்கள்
விரும்புவதாக அவர் கூறினார்.
இன்று இங்கு நடைபெற்ற மைஸ்டோரேஜ் தொழில்நுட்பத்தின் வெளியீட்டு விழாவில் அன்வர் தனது முக்கிய உரையில் இவ்வாறு கூறினார்!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *