ஜூலை மாதம் Gig Workers ஆணைய மசோதா! - பிரதமர் அறிவிப்பு

top-news
FREE WEBSITE AD


கிக் ஒர்கர்ஸ்  எனப்படும் தற்காலிக பகுதி நேர தொழிலாளர்களுக்கான ஆணையம் அமைப்பதற்கான மசோதா ஜூலை மாதம் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என்று பிரதமர்  டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் தெரிவித்துள்ளார்.

கிக் பொருளாதாரத் துறையில் உள்ள இளைஞர்களின் முன்மொழிவின் அடிப்படையில் மசோதாவைத் தாக்கல் செய்ய அரசாங்கம் முடிவு செய்ததாக அவர் கூறினார்.

அவர்களில் 100,000 க்கும் அதிகமானோர் கிக் பொருளாதாரத் துறையில் பணிபுரிவதால் கிக் தொழிலாளர்கள் ஆணையத்தை அவர்கள் விரும்புவதாக அன்வார் கூறினார்.

இதற்கான அரசாங்கத்தின் கொள்கை வகுக்கப்பட்டுள்ளதோடு, சட்டமும் உள்ளது. இது ஜூலையில் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என்று தாம் நம்புவதாக அவர் தெரிவித்தார்!

கடந்த மார்ச் மாதம் புத்ராஜெயாவில் நடந்த பூமிபுத்ரா பொருளாதார காங்கிரஸின் (KEB) நிறைவில், கிக் தொழிலாளர்கள் ஆணையத்தை நிறுவுவதாக அன்வார் அறிவித்தார்.

1.12 மில்லியன் கிக் தொழிலாளர்களின் உரிமைகளைப் பாதுகாப்பது, சமூகத் தேவைகளைப் பூர்த்தி செய்தல், ஒப்பந்தச் சர்ச்சைகளைத் தீர்ப்பது மற்றும் சம்பந்தப்பட்ட குழுவின் தொழில் முன்னேற்றத்தை ஊக்குவித்தல் ஆகியவற்றில் கவனம் செலுத்துவது அவசியம் என்று அவர் கூறினார்.

இதையடுத்து, மே 1 ஆம் தேதி, கமிஷன் அமைப்பதற்கான பணிகளை விரைவுபடுத்த வேண்டும் என, அன்வர் கேட்டுக் கொண்டார்!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *