சீனா ஒபன் பூப்பந்து போட்டியில் இருந்து லீ ஸி ஜியா விலகல்!

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், ஜூலை 16-

மலேசியாவின் முன்னணி ஆடவர் ஒற்றையர் பூப்பந்து வீரர் லீ ஸி ஜியா, வரவிருக்கும் 2025 சீனா ஓபன் பேட்மிண்டன் போட்டியில் இருந்து விலகியுள்ளார். இந்தத் தகவலை பேட்மிண்டன் உலக கூட்டமைப்பு தனது இணையதளத்தில் உறுதிப்படுத்தியுள்ளது. இந்த சூப்பர் 1000 தொடர், ஜூலை 22 முதல் 27 வரை சாங்ஸோ ஒலிம்பிக் விளையாட்டு மையத்தில் நடைபெறவுள்ளது. இருப்பினும், லீ ஸி ஜியாவின் குழு இதற்கு எவ்வித அதிகாரப்பூர்வ விளக்கமும் அளிக்கவில்லை.

27 வயதான லீ ஸி ஜியா, கடந்த டிசம்பர் 2024 இல் நடைபெற்ற உலக டூர் இறுதிப் போட்டியின் போது ஏற்பட்ட கணுக்கால் காயம் காரணமாக இந்த ஆண்டு பல தொடர்களில் இருந்து விலகியுள்ளார். இந்தக் காயம், அவரது 2025 ஆம் ஆண்டு பருவத்தை பெரிதும் பாதித்துள்ளது. மார்ச் மாதம் ஒர்லியன்ஸ் மாஸ்டர்ஸ் தொடரில் திரும்பி வந்த அவர், காலிறுதிப் போட்டியில் அயர்லாந்தின் நாட் நுயெனிடம் 21-23, 7-21 என்ற கணக்கில் தோல்வியடைந்தார். பின்னர், ஆல் இங்கிலாந்து போட்டியில் முதல் சுற்றில் ஹாங்காங்கின் அங்கஸ் என்ஜி கா லாங்கிடம் 21-19, 16-21, 12-21 என்ற கணக்கில் தோல்வியடைந்தார்.

இந்தக் காயம் காரணமாக, லீ ஸி ஜியா மலேசியா ஓபன், இந்திய ஓபன். இந்தோனேசியா மாஸ்டர்ஸ், சுவிஸ் ஓபன், அமெரிக்க ஓபன், ஜப்பான் ஓபன் ஆகிய தொடர்களில் இருந்து ஏற்கெனவே விலகியுள்ளார். இந்தத் தொடர்ச்சியான விலகல்கள், அவரது உலக தரவரிசையை பாதித்து, தற்போது 27ஆவது இடத்தில் உள்ளார்.

மலேசிய விளையாட்டு ஆர்வலர்கள், பயிற்சியாளர்கள், லீ ஸி ஜியாவின் மீட்பு, எதிர்காலப் போட்டிகளில் அவரது பங்கேற்பு குறித்து கவலை அடைந்துள்ளனர். முன்னாள் ஒலிம்பிக் வெண்கலப் பதக்கம் வென்றவரான ரஷித் சிடெக், ஸி ஜியாவின் உடல், மனநிலை குறித்து கவலை தெரிவித்தார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *