மகனுக்காக மன்னிப்பு கேட்ட விஜய் சேதுபதி!

top-news
FREE WEBSITE AD

துபாயில் அக்கவுண்டன்ட் வேலைபார்த்து வந்த விஜய் சேதுபதி சினிமாவின் மீது இருந்த காதலால் தொலைக்காட்சி சீரியல்கள் மற்றும் திரைப்படங்களில் சின்ன சின்ன கேரக்டர்களில் நடித்து பின்னர் 2010ம் ஆண்டு இயக்குநர் சீனு ராமசாமியால் வெள்ளித்திரையில் நடிகராக அறிமுகப்படுத்தப்பட்டார்.

சினிமாவில் எந்த பின்னணியும் இல்லாமல் தனக்கென தனி இடத்தை விஜய் சேதுபதி தனது கடின உழைப்பால் 15 ஆண்டுகளில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரானார்.

இந்த நிலையில் கடந்த 2019ம் ஆண்டு இயக்குநர் சு.அருண்குமார் இயக்கத்தில் வெளியான 'சிந்துபாத்'திரைப்படத்தின் தனது அப்பாவுடன் நடித்த விஜய் சேதுபதியின் மகன் தற்போது ஹீரோவாக வளர்ந்து நிற்கிறார். சண்டைப் பயிற்சியாளர் அனல் அரசு இயக்கத்தில் உருவாகியுள்ள பீனிக்ஸ் திரைப்படத்தில் சூர்யா சேதுபதி, வரலட்சுமி சரத்குமார், தேவதர்ஷினி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இந்தப் படத்தின் புரமோஷன் ஆரம்பித்த சமயத்தில் பத்திரிகையாளர்கள் மத்தியில் சூர்யா சேதுபதி பேசும்போது, என் அப்பா வேறு. நான் வேறு என்று பேசியது ட்ரோல் செய்யப்பட்டது. தன்னுடைய அப்பா இல்லாமல் இவ்வளவு சிறுவயதில் ஒரு நடிகராக வரமுடியுமா என்ற விமர்சனங்களும் எழுந்தன.
இதையடுத்து தான் பேசியதற்காக வருத்தம் தெரிவித்திருந்த சூர்யா சேதுபதி அடுத்ததாக வாயில் பபுள் கம் போட்டபடி அதை மென்று கொண்டே தன்னுடன் புகைப்படம் எடுக்க வந்தவர்களோடு நின்றது ட்ரோல் வீடியோ ஆனது.

அந்த வீடியோக்களை யூடியூபில் அப்லோட் செய்த போது காப்பிரைட் ஸ்ட்ரைக் கொடுத்து நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தெரிகிறது. இந்த நிலையில் நேற்று (ஜூலை 3)ம் தேதி தனது மகனின் பீனிக்ஸ் திரைப்படத்தை பார்க்க வந்த விஜய் சேதுபதியிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது பேசிய அவர், "காப்பி ரைட் கொடுத்தது தெரியாமல் தம்பிமார்கள் செய்திருப்பார்கள். மன்னித்துவிடுங்கள்." என்றார். மேலும் தன்னுடைய மகனையும் இயக்குநர் அனல் அரசையும் கட்டிப்பிடித்து வாழ்த்து தெரிவித்தார் விஜய் சேதுபதி


ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *