தன் 50 வது பட வெற்றிக்காக துபாயில் தயாரிப்பாளருக்கு பெரும் செலவு வைத்த விஜய் சேதுபதி!

top-news
FREE WEBSITE AD

விஜய் சேதுபதியின் ஐம்பதாவது படம் மகாராஜா. இந்த படம் சினிமாவில் தன் கௌரவத்தை காப்பாற்ற வேண்டும் என யோசித்து பற்பல விஷயங்களை செய்து வருகிறார் மக்கள் செல்வன்.

தற்பொழுது துபாயில் இவர் வைத்த வேட்டு தான் மொத்த கோடம்பாக்கத்தையும் வாயை பிளக்க வைத்துள்ளது.குரங்கு பொம்மை இயக்குனர் நித்தின் சுவாமிநாதன் இந்த படத்தை இயக்குகிறார். இது ஜூன் 14ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீசாக இருக்கிறது. இந்த படத்தில் விஜய் சேதுபதி செம பர்பாமென்ஸ் கொடுத்திருக்கிறார். மகாராஜா படம் அவருக்கு ஒரு டர்னிங் பாயிண்டாக இருக்கும் என மொத்த யூனிட்டும் பேசி வருகிறது.

மகாராஜா படத்தின் பிரமோஷனுக்காக மொத்த படக்குழுவினர்களுடன் துபாய் சென்றுள்ளார். அங்கே புர்ஜ் கலிபாவில் இந்த படத்தை டிஸ்ப்ளே செய்கிறார்கள். அந்த இடத்தில் மூன்று நிமிடம் திரையிடுவதற்கு 75 லட்ச ரூபாய். கிட்டத்தட்ட பத்து நிமிடங்கள் வரை இதை வெளியிட திட்டம் போட்டு வருகிறார்கள்.

புர்ஜ் கலிபா, துபாயில் உள்ள உயரமான கட்டிடம். அங்கே தான் விஜய் சேதுபதி தன் கௌரவத்திற்காக தயாரிப்பாளருக்கு பெரும் தொகையை செலவு வைத்துள்ளார். விஜய் சேதுபதி தன் சம்பளப் பணத்தில் இருந்து கொஞ்சம் கூட குறைக்கவில்லையாம்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *