மலேசிய பன்முக கலாச்சார தற்காப்பு விழாவில் கெடா குத்து வரிசை சிலம்ப மாணவர்கள்!

- Muthu Kumar
- 21 Dec, 2024
(தி.ஆர்.மேத்தியூஸ்)
சுங்கைப்பட்டாணி, டிச. 21-
கெடா சுங்கை பட்டாணியில் நடைபெற்ற மலேசிய பன்முக கலாச்சார தற்காப்புக் கலை விழாவில்,கெடா மாநில குத்து வரிசை சிலம்பக் கழகத்தைச் பிரதிநிதித்து மாணவர்கள் சிறப்புடன் பங்கேற்றனர்.போட்டி நிலையில் இல்லாமல்,மாணவர்கள் தங்களின் திறமையை வெளிப்படுத்தும் விதத்தில் நடத்தப்பட்ட சிலம்பப் பிரிவில் 33 மாணவர்கள் பங்கேற்றனர்.
மதேஸ்புரொடக்சன் ஹவுஸ் ஏற்பாட்டில்,சுங்கபட்டாணி வில்லேஜ் மாலில் நடைபெற்ற இவ்விழாவில்,கிளப் தெக்குவாண்டோ லெஜெண்ட் சீலாட் கோயாங் மலேசியா கிளப் மற்றும் இயக்கங்களின் மாணவர்களும் கலந்து கொண்டனர் என கெடா மாநில குத்து வரிசை சிலம்பக் கழகத்தின் ரூமான மாஸ்டர் பிரகாஷ் தெரிவித்தார்.
நமது பாரம்பரியக் கலைகளில் ஒன்றான சிலம்பத்தை இந்திய இளைஞர்கள் மத்தியில் கொண்டு செல்வதற்கு ஏதுவாக,இந்த விழாவை ஏற்பாடு செய்து நடத்தியதாக விழாவின் ஒருங்கிணைப்பாளரான மாஸ்டர் எம்ஜே தேவதாஸ் அய்யாசாமி குறிப்பிட்டார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *